விவாகரத்தான பின்னரும் நாக சைதன்யா கூறிய ஒற்றை பதில்! ஆடிப்போன ரசிகர்கள்
விவாகரத்துக்கு பிறகும் சமந்தாவை விட்டுக்கொடுக்காமல் நாகசைதன்யா தெரிவித்த கருத்து ஒன்று ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ..சொல்றீயா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
விவாகரத்தை அறிவித்த பிறகு சமீபத்தில் சமந்தாவும், நாக சைதன்யாவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். ஐதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இருவர் நடிக்கும் பட ஷுட்டிங்கும் நடந்துள்ளது. இதில் கலந்து கொள்ள வந்தவர்கள், நேருக்கு நேர் பார்த்தும் ஏதும் பேசிக் கொள்ளாமல் தங்களின் கார்களில் ஏறி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நாக சைதன்யா முதல் முறையாக விவாகரத்து பற்றி பேசி உள்ளார். அதில், விவாகரத்தில் சமந்தாவிற்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம் தான் என கூறி இருந்தார். இதனால் நாக சைதன்யாவுக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லையா. சமந்தாவின் கட்டாயத்தால் தான் விவாகரத்து நடைபெற்றதா என்ற கேள்வியும் இதனால் எழுந்தது
அப்போது சினிமாவில் உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார் என நினைக்கிறீர்கள். யாருடன் உங்களுக்கு கெமிஸ்ட்ரி ஒத்து போவதாக கேட்கப்பட்டது. அதற்கு நாக சைதன்யா சொன்ன பெயரை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் வேறு யாருடைய பெயரையும் சொல்லாமல் தனது முன்னாள் மனைவி சமந்தாவின் பெயரை தான் சொன்னது தான் அதற்கு காரணம்.
எந்த படம் இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கும் சமந்தா நடித்த மஜ்லி படத்தை தான் கூறி உள்ளார் நாக சைதன்யா. மஜ்லி படத்தில் திவ்யன்ஷா கெளசிக்கிற்கு ஜோடியாக தான் சமந்தா நடித்திருந்தார். இந்த படம் மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022