Neeya Naana: எனது பெயர்லயே செயினா? அரங்கத்தில் பெண்ணின் தங்க செயினை தட்டிப் பறித்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் தமிழ் நாட்டின் பாரம்பரிய நகைகளை விரும்புகிறவர்கள் மற்றும் நவீன நகைகளை விரும்புகிறவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தமிழ் நாட்டின் பாரம்பரிய நகைகளை விரும்புகிறவர்கள் மற்றும் நவீன நகைகளை விரும்புகிறவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண்கள் தாங்கள் அணிந்து வந்திருக்கும் பாரம்பரிய நகைகளைக் குறித்து பல விடயங்களைக் கூறியுள்ளனர். அதிலும் கோபி செயின் என ஒன்றினை பெண் ஒருவர் அணிந்துவந்த நிலையில், இதனை கோபிநாத் தட்டிப்பறித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |