வீட்டைவிட்டு வெளியேறிய குடும்பம்: மாஸ் எண்ட்ரி கொடுத்த மாறன்! நாம் இருவர் நமக்கு இருவர் புதிய ப்ரொமொ
‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் – 2’ சீரியலில் மாறன் மாஸ் என்ட்ரீ கொடுக்கும் ப்ரோமோ தற்போது இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டும் வைரலாகியும் வருகிறது.
சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சியாக வலம் வரும் விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் – 2’.
தற்போது இரண்டாவது சீசன் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல திடீர் திருப்பங்களும் காணப்படுகின்றது.
குறித்த சீரியலில் கடந்த வாரம் முத்துராசை கொன்றது யார் என்ற கேள்விக்கு விடையை கண்டுப்பிடிக்க எடுத்த முயற்சிகள் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, முத்துராசை கொன்றது காயத்திரி தான் என்று உண்மை தெரிய வந்ததால் அதிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற முழு சொத்தையும் மாசாணிக்கு எழுதி கொடுத்து விட்டார் மாயன்.
இதனால் மாயன் மற்றும் அவரது குடும்பத்தினரை, மாசாணி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இங்கு யாரும் எதிர் பார்க்காத திருப்பமாக மாயனின் சகோதரன், மாறன் புதிதாக மாஸ் என்ட்ரீ கொடுத்துள்ளார். இக்காட்சி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.