வலியால் கதறுகிறேன்! வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பதிவு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில மாதங்கள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் உடற்பயிற்சியை துவக்கியுள்ளதாக டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
தனுஸுடன் பிரிவு
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்ற நிலையி்ல், இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
ஆனால் அண்மையில் இருவரும் பிரிவதாக கூறி பதிவு ஒன்றினை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். பின்ப ரசிகர்கள் இவர்கள் இருவரும் ஒன்று சேரமாட்டார்களா என்று ஏங்கி வருகின்றனர்.
தாமரையின் கணவருக்கு இரண்டாவது திருமணம் நடக்கப்போகிறதா?
மகன்களுடன் தனுஷ்
இருவரும் பிள்ளைகள் குறித்து ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளார்களாம். தனுஷ் வேலையில் பிஸியாக இருக்கும் போது ஐஸ்வர்யாவிடமும், ஐஸ்வர்யா வேலையில் பிஸியாக இருக்கும் போது தனுஷுடனும் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.
தற்போது ஐஸ்வர்யா தனது வேலையில் பிஸியாக இருந்து வருவதால் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தனது தந்தை தனுஸுடன் இருந்து வருகின்றனர்.
தனுஸுடன் மகன்கள் இருக்கும் புகைப்படம் கூட அண்மையில் வெளியாகி இருந்தது.
ஐஸ்வர்யாவின் புதிய பதிவு
ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் முசாபிர் சமீபத்தில் வெளியாகி பாராட்டை குவித்த நிலையில், ஐஸ்வர்யா லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றினை இயக்க உள்ளார்.
சமீபத்தில் தனுஷின் பெயரை டுவிட்டரிலிருந்து நீக்கிய ஐஸ்வர்யா தற்போது புதிய பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.
சில மாதத்திற்கு பிறகு மீண்டும் வொர்க் அவுட் செய்வதாகவும், உடல் வலியால் கதறுவதாகவும் தன்னுடைய டுவிட்டர் பதிவில் ஐஸ்வர்யா குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.மேலும் நம்முடைய உண்மையான சக்தியை யாரும் அறிய முடியாது என்றும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
Back to workout after more than a month again,I hear my body screaming in pain,I slide against the wall,cautious I don’t fall,I stop n smile,telling myself I’ve done this before n I draw strength from my heart n core.sweat,glow n grow,let only positivity flow #mondaymotivation ?? pic.twitter.com/o4ffR6MgY9
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 28, 2022