ருசியான மட்டன் பிரியாணி! இப்படி மட்டும் செய்தால் அண்டாவே காலியாகிடும்
பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது, இதன் மணமே பல வீடுகள் வரை சுண்டி இழுக்கும்.
அதுவும் மட்டன் பிரியாணி என்றால் ... நாவூறும் பிரியர்களுக்காக அதன் செய்முறை விளக்கம்,
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத ஆட்டுக்கறி- அரை கிலோ
பாஸ்மதி அரிசி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்)
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள்- 1 டேபிள்ஸ்பூன்
கெட்டித் தயிர் - 200 மில்லி
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
நெய் - 50 மில்லி
எலுமிச்சைப்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஆட்டுக்கறியை நன்கு கழுவிக் கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, மீதம் இருக்கும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
இதன் பின்னர் மல்லித்தூள், மிளகாய்தூள், மீதமிருக்கும் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும், இதனுடன் ஆட்டுக்கறி சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஒரு டம்ளர் அரிசி எனில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் என தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரிசியை போட்ட பின்னர் நன்றாக கலந்து விடவும்.
தண்ணீர் நன்றாக வற்றிய பின்னர், நெய் ஊற்றி கிளறவும், பாத்திரத்தை மூடிவைத்து அதன் மேல் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தை வைத்து தம் போட்டு விடவும்.
சிறிது நேரம் கழித்து திறந்தால் சுவையான மணக்கும் பிரியாணி தயார்!!!