மோசமான வியாதியால் பாதிக்கப்பட்டவரின் பரிதாப நிலை! வயிற்றிலிருந்து 1 கிலோ கட்டியை அகற்றி மும்பை டாக்டர் சாதனை
மும்பையில் வயற்றில் 1 கிலோ கட்டியுடன் தவித்த இளைஞருக்கு டாக்டர்கள் இலவசமாக சிகிச்சை செய்துஅவரது வயிற்றில் இருந்த 1கிலோ கட்டியை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேற்குவங்கமாநிலம் கல்கத்தாவைச் சேர்ந்தவர் சேக், இவருக்கு பிறவிலேயே எக்ஸ்டோபி -எப்பிஸ்பேடியாஸ் காம்பிளக்ஸ் என்ற வியாதி இருந்துள்ளது.
இது மிகவும் அரிய வகையான வியாதி லட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த வியாதி வரும். இந்த வியாதி இருப்பவர்களுக்கு சிறுநீரக பையில் அதிகமாக சிறுநீர் சேராது. இதனால் சிறுநீரகம் சரியாக செயல்படாது. சிறுநீர் அடிக்கடி லீக் ஆகிவிடும்.
இந்த வியாதியால் அவதிப்பட்ட சேக் யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். கூலி வேலை செய்து தன் பிழைப்பை நடத்த வருகிறார்.
இவருக்கு இந்த வியாதிக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் சரியாவில்லை. அவரிடம் யாரோ இந்த வியாதிக்கான சரியான மருத்துவர் என மும்பையில் உள்ள எஸ்எல் ரகேஜா மருத்துவமனையின் மருத்துவரான ராஜீவ் ராத்கேரின் நம்பரை கொடுத்துள்ளனர்.
அவருடன் சேக் போனில் பேசி தனது பிரச்சனையை சொல்லியுள்ளார். அவரை நேரில் வரவழைத்து சோதித்த டாக்டர். இவருக்கு குறிப்பிட்ட இந்த வியாதி இருப்பதை உறுதி செய்தார். இதற்கு அறுவை சிகிச்சை தான் ஒரு வழி என முடிவு செய்தார்.
ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சேக்கிடம் பணம் இல்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தை டாக்டர் ராஜீவ் தனது நிர்வாகத்திற்கு கொண்டு சென்றார். நிர்வாகத்தினர்.
சேக்கிற்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது வயற்றில் இருந்த சுமார் 1 கிலோ எடை கொண்ட கட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இந்தஅறுவை சிகிச்சை கடந்த ஜூன் 30ம் தேதி நடந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த அறுவை சிகிச்சை அளித்த டாக்டரை மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்