இந்த ராசியினர் செம கியூட்டா இருப்பாங்களாம்... மற்றவர்களை மகிழ்விப்பதிலும் கில்லாடிகள்!
பொதுவாகவே நமது ஒரு சில குணாதிசயங்களால் நாம் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றோம் என்பது அனைவரும் அறிந்ததே.
அப்படி குணங்களாலும் தோற்றத்தாலும் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதில் பிறப்பு ராசியானது பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை ஈர்க்கும் அளவுக்கு தோற்றத்தாலும், குணத்தாவும் மிகவும் அழகானவர்களாக இருப்பார்களாம். இவர்கள் இருக்கும் இடம் மகிழ்சியால் நிரம்பியிருக்கும்.
அப்படி இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், தங்களைச் சுற்றி புன்னகையைப் பரப்பி, அனைவரையும் மகிழச்சியடைய செய்யும் கியூட்டான தோற்றம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் இனிமையானவர்களாகவும் கனிவானவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் தோற்றம் மற்றும் வசீகரிக்கும் புன்னகை பார்ப்பவர்களை நொடியில் ஈர்க்கும் காச்த ஆற்றலை கொண்டிருக்கும். இவர்கள் பண்புகளாலும் அழகானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற இரக்கமுள்ளவர்கள் மனதை நிச்சயம் கொண்ருப்பார்கள். இந்த ராசியினர் இருக்கும் சூழலை மகிழ்ச்சிப்படுத்துவதில் பெயர் பெற்றவர்கள்.
துலாம்
துலா ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களுடன் நன்றாகப் பழகுவார்கள். இவர்கள் தாங்கள் செழிக்க மற்றவர்களை தாழ்த்த வேண்டும் என்ற சுயநல குணம் அற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பானவே மற்றவர்களை வசீகரிக்கும் அளவுக்கு அழகிய முகம் மற்றும் கம்பீரமான தோற்றம் இருக்கும்.
இவர்கள் மற்றவர்களால் அதிகம் போற்றப்படுகிறார்கள், அவர்கள் சிரிக்கும்போது, மற்றவர்கள் முடிந்தவரை இவர்களுடன் இணக்கமடைந்துவிடுவார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்களை புறக்கணிப்பது மிகவும் சவாலான விடயமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியான சுக்கிரனால் ஆளப்படுவதால்,இயல்பாவே மற்றவர்களால் தவிர்க்கவே முடியாத அளவுக்கு அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே பிடிவாத குணம் கொண்டவர்களாக இருந்தாலும், மற்றவர்களை மகிழ்விப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் அன்புக்குரியவர்களின் மகிழ்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
இவர்கள் வாழுங்கள், வாழ விடுங்கள் என்ற தத்துவத்தை பின்பற்றும் கொள்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை மகிழ்சிப்படுத்தி தானும் மகிழ்சியடையும் உன்னத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |