Slow poison கலந்து கொடுத்துட்டாங்க - கண்ணீருடன் நடிகர்
நடிகர் பொன்னம்பலம் தான் வீல் தெருவில் வீல் சேரில் உட்கார்ந்தபடி இருந்து ஆடிய காரணம் என்ன என்பதை தற்போது வெளிப்படுத்தி பேசி உள்ளார்.
நடிகர் பொன்னம்பலம்
ஒரு காலத்தில் வில்லன் வேடங்களில் பறந்து பறந்து சண்டை போட்ட நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் வீல்சாரில் எழும்ப கூட முடியாமல் உட்காந்து ஆடிய காணொளி மக்கள் மத்தியில் வைரலானது.
இவருக்கு என்ன ஆனது முத்து படத்தில் எல்லாம் எப்படி நடித்து இருந்தார் என மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். பலரது வாழ்க்கையில் பல விடயங்கள் நடக்கும்.
இப்படி தான் தற்போது பொன்னம்பலம் அவர் இந்த நிலைக்கு வர என்ன காரணம் என்பதை ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார்.

ஆடியதற்கு காரணம்
“நான் அன்னைக்கு அப்படி நான் வீல் சாரில் உட்காந்து ஆட காரணம் என் அக்கா தான். அவர் என்னை அம்மாவிற்கு சமமாக வளர்த்தார். என்ன நடந்தாலும் விடு டா பார்துக்கலாம் என எனக்கு தட்டி கொடுப்பார்.
அப்படி பட்ட என்னுடைய அக்கா அன்னைக்கு காலையில் மாரடைப்பால இறந்துட்டா. அவ இறந்த வலி எனக்கு தாங்க முடியாம தான் நான் உட்காந்த படி ஆடி என்னுடைய வருத்ததை குறைத்து கொண்டேன்.
உண்மையாகவே அன்னைக்கு எனக்கு உட்காந்து கூட ஆட முடியல. உடம்பெல்லாம் வலி ஆனா ஆடின உடனே தான் என்னால் கொஞ்சம் மன நிம்மதியா இருக்க முடிஞ்சிச்சு. இது தான் நான் அன்னைக்கு உட்காந்து வீல் சாரில் இருந்தபடி ஆடினேன். ஆனால் என் குடும்பமே என்னை கொலை செய்ய பாத்தாங்க”.

தனிப்பட்ட வாழ்க்கை
“நான் இப்போ இப்படி சார்ல உட்காந்து இருக்கேன். இதற்கு காரணம் என்னுடைய அண்ணண் தான். என்னோடு கூட பிறந்த அண்ணண் எனக்கு சூனியம் வச்சார். குடும்பத்தில சில பிரச்சனை அதனால் என்மேல் என் அண்ணனுக்கு பொறாமை.
இந்த பொறாமையால என்னை இன்கம் டாக்ஸ் மாட்டி விட்டார் என்னுடைய அசிஸ்டன்ட் வச்சே நான் சாப்பிடும் ரசத்துல குதிரை பொடியை கலந்து கொடுத்தாங்க.
அது குடல்ல போய் குத்தி ரணமாகி மூணு வருஷமாக பேதியால் அவதிப்பட்டு அதனால என் உடம்பே போயிடுச்சு.
இது மட்டும் செஞ்சதோட விடல ஒரு நாள் நான் குடிச்ச பீர்ல ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்துட்டார் என் அண்ணண் அதனால தான் என்னுடைய கிட்னியே போச்சு என பொன்னம்பலம் கண்ணீருடன் கூறினார்.”
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |