ரிஷபத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகக்கு ஜாக்பாட் உறுதி!
நமது வாழ்ககையுடன் நேரடியாகவே கிரகங்களின் பெயர்ச்சி தொடர்புப்படுவதால், நவகிரங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் கிரங்களின் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜ யோகங்கம் ஜோதிட ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
அந்தவகையில் நவ கிரகங்களின் இளவரசனாக அறியப்படும் புதன் பகவானின் பெயர்ச்சி ஆற்றல், அறிவு, புத்திக்கூர்மை, கல்வி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சூரியனுடன் ஒன்றிணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்கி பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் மே 15 ஆம் திகதி ரிஷப ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார்.
இதனால் ஜோதிடத்தின் பிரகாரம் சில ராசிகளின் கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். அதன் தாக்கமானது பெரும்பாலும் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் நிதி விடயத்தில் அதி உச்ச சாதக பலன்கள் எந்தெந்த ராசிகளுக்கு என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றதும், புதாதித்ய ராஜயோகத்துடன், கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகவுள்ளதால் இந்த ராசியினரின் நிதி நிலையில் அபரிமிதமான ஏற்றம் உண்டாகப்போகின்றது.
புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும். இந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கும் எந்த விடயமும் எதிர்பாராத அளவுக்கு வெற்றியை கொடுக்கும்.
இவர்களின் நீண்ட கால உழைப்புக்கான வெகுமதியை பெறப்போகின்றார்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய முயற்ச்சிகளில் வெற்றி நிச்சயம்.
கும்பம்

கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் சென்று புதாதித்ய ராஜயோகத்துடன், கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளதால் கும்ப ராசியினரின் வாழ்வில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் உண்டாகப்போகின்றது.
இவர்களின் பொருளாதார நிலையில் பெரியளவில் மாற்றம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
புதனின் ஆசியால் இந்த காலகட்டத்தில் தனித்துவமான சிந்தனைகள் தோன்றுவதால், புதிய முயற்ச்சிகளில் வெற்றி நிச்சயம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் புதாதித்ய ராஜயோகத்துடன், கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளதால் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டுமே சிறப்பாக இருக்கும்.
உடன் பிறந்தவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குறிப்பாக தொழிலில் அமோக முன்னேற்றம் உண்டாகும்.
பணியிடத்தில் நீண்ட நாட்களாக சந்தித்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும். சக ஊழியர்களுடனான உறவு மேம்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |