மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன் : தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்!
ஜோதிட கணிப்புகளில் ஒருவருடைய ராசி நட்சத்திரம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதே அளவுக்கு நவகிரகங்களின் நிலையும் கருத்தில் கொள்ளப்படும்.
காரணம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ,ஆற்றல் வாய்ந்த கிரகங்கள் இணைந்து உருவாக்கும் ராஜயோகங்கள் மற்றும் கிரகங்களின் ராசி நட்சத்திர உதயம், அஸ்தமனம் ஆகியன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தும்.

அந்தவகையில், கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகவும் அறியப்படுகின்றார்.
புதன், குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். அதுவும் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர் தான் புதன்.தற்போது மீன ராசியில் பயணித்து வரும் புதன் ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

மேஷ ராசிக்குள் நுழைந்த மறுநாளே, அதாவது மே 01 ஆம் தேதி புதன் அந்த ராசியில் அஸ்தமனமாகி பயணிக்கவுள்ளார்.
குறித்த புதன் அஸ்தமனதானது அனைத்து ராசிகளிலும் சில சாதக மற்றும் பாதக விளைவுகைளை ஏற்படுத்ததினாலும், தொழில் ரீதியில் உச்சகட்ட சாதக நன்மைகளை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாவதால், இவர்களின் தொழில் வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்களி்டம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதற்கான சூழல் உருவாகும்.
தொழில் விடயத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மேலோங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவதன் விளைவாக இந்த ராசியினரின் தொழல் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.
இவர்கள் தொழில் மற்றும் வியாபர ரீதியில் எடுக்கும் அனைதத்து முயற்சிகளிம் வெற்றி உண்டாகும். மனநிலையில் தெளிவு பிறக்கும்.
இவர்களுக்கு புதிய வருமானத்துக்கான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாவதால், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டுமே அமோகமாக இருக்கும்.
பல்வேறு வழிகளிலும் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
குறிப்பாக கலைத் துறையில் பணிப்புரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |