இந்த கோவில்களுக்குள் ஆண்கள் நுழைய தடை! மீறினால் பேராபத்து.... ஏன் தெரியுமா?
பொதுவாக இந்தியாவில் சபரிமலை ஐயப்பன் போன்ற சில கோவில்களில் பெண்களை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள்.
ஆனால் ஆண்களை அனுமதிக்காத கோவில்களும் இந்தியாவில் உள்ளது.
இந்த பதில் எந்தெந்த கோவில்களில் ஆண்களுக்கு அனுமதியில்லை என்று பார்க்கலாம்.

பிரம்மா கோவில் - புஷ்கர் ராஜஸ்தான்
பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே இந்து கோவில் ராஜஸ்தானின் புஷ்கரில் இருக்கும் ஜகத்பிதா பிரம்மா கோவில் ஆகும். இந்த கோவிலுக்குள் ஆண்கள் அணுமதிக்கப்படுவது இல்லையாம்.
அட்டுகல் கோவில்- திருவனந்தபுரம் கேரளா
இந்த கோவிலில் நடக்கும் அட்டுகல் பொங்கல் திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த அட்டுகல் பகவதி கோவில் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் கிட்டதட்ட 30 லட்சம் பெண்கள் வருகை தருகின்றனர்.
இந்த புகழ் வாய்ந்த கோவில் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கிறது.
தேவி கன்யா குமாரி - தமிழ்நாடு
ஸ்ரீ பகவதிக்கு தனது இளம் பருவ வடிவத்தில் அர்ப்பணிக்கப்பட்ட பகதி மா கோவில் கன்யா குமாரியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரேபிய கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
இந்து புராணங்களின்படி, இந்த கோவில் பரசுராம முனிவரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

சக்தி பீடம்
இந்த கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவில் இருக்கும் இடத்தில் சக்தியின் முதுகெலும்பு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு பாதுகாப்பாக இதன் உட்புறம் ஒரு காலபைரவர் கோவிலும் உள்ளது.
சக்குலதுகாவ் கோவில் – ஆலப்புழா கேரளா
கேரளாவின் அலுப்புழா மாவட்டத்தில், தலவடி பஞ்சாயத்தில், நீரட்டுபுரத்திற்கு அருகில் இந்த துர்கா தேவி கோவில் அமைந்துள்ளது. அங்கிருக்கும் உள்ளூர் மக்களுக்கு கூட இந்த புனித கோவில் பற்றி தெரியாமல் இருந்தது, தற்சமயம் இது புனரமைக்கப்பட்ட பிறகுதான் இந்த கோவிலை பற்றி அனைவரும் அறிந்தனர்.
மாதா கோவில் - முசாபர்பூர் பீகார்
ஆண்டு முழுவதும், இந்த புனித ஆலயம் அதன் அனைத்து பக்தர்களுக்கும் திறந்திருக்கும், ஒரு சிறப்பு காலம் தவிர, எந்த ஆணும் கோவில் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது தங்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த விதி கோவில் பூசாரிக்கும் பொருந்தும். அந்த குறிப்பிட்ட காலத்தில் கோவில் பூசாரி கூட கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்.
ஆண்கள் நுழையக்கூடாது
ஸ்ரீ பகவதி சன்யாசத்தின் கடவுளாக கருதப்படுகிறார். எனவே திருமணம் ஆன ஆண்கள் இந்த கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை.
பிரம்மச்சரியம் அல்லது சன்யாசத்தை பின்பற்றும் ஆண்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் அதுவும் வாசற்கதவு வரை மட்டுமே.
அங்கேயே நின்று ஸ்ரீ பகவதியை வணங்கிவிட்டு சென்று விட வேண்டும். சிவனை கணவராக பெறுவதற்காக பார்வதி தேவி இங்குதான் அவரது தவத்தை தொடங்கினார் என்று கூறப்படுகிறது. அதனால் பெண்கள் மட்டுமே இங்கு கருவறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.