நடிகை மீனாவின் கணவர் உயிரிழக்க இது தான் காரணமா?... உறவினர்களின் கொடுத்த ஷாக் நியூஸ்
நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
இதனிடையில், மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இதனிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீண்ட அவர் அதன் பக்கவிளைவுகள் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது இருந்துவந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி மரணம்
கடந்த நாட்களில் நெஞ்சுவலிக்காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் தற்போது காலமாகியுள்ளார்.
இதுகுறித்து அவர்கள் உறவினர்கள் வட்டாரத்தில் கூறியது, வித்யாசாகருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அவை இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்சனை.
உயிரிழக்க காரணம்
அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
அதனால், அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.