மீனா ரொம்ப நல்ல பொண்ணு.. இந்த பொழப்பு தேவையா? நடிகர் மீது கடுமையான விமர்சனம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்பில் மர்மம் நிலவுவதாக பேசிய பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விளாசி தள்ளியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
இவரது மரணம் குறித்து ஏகப்பட்ட வதந்திகளும் உலாவிய நிலையில், பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்திருந்தார்.
ஏற்கனவே நடிகைகள், நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பயில்வான ரங்கநாதன் அவதூறு பரப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்திலும் தயாரிப்பாளர் ராஜன் புகார் அளித்திருந்தார்.
மீனா நல்ல பொண்ணு
இந்நிலையில் தெற்கத்தி வீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராஜன்,
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தென்னிந்திய மொழிகளில் டாப் ஸ்டாராக வலம் வந்த மீனா குணத்தில் மிகவும் நல்ல பொண்ணு, அடக்கமானவர்.
அவருக்கு இப்படியொரு நிலை வரும் என கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை, இளம்வயதில் காலமான கணவனை இழந்து மீனா தவித்து வருகிறார், அப்பாவை இழந்து நைனிகா தவித்து வருகிறார்.
கடுமையான விளாசல்
ஆனால் மீனா கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஒரு யூடியூபர் போட்டு பணம் சம்பாதிக்கிறான், நான் சுத்தி வளைச்சு பேச விரும்பவில்லை, பயில்வான் ரங்கநாதனை தான் கூறுகிறேன்.
ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் மீனாவுக்கு ஆறுதல் கூறிவரும் நிலையில், பயில்வான் மட்டும் அசிங்கமான வேலையை பாரக்கிறான், இவர்களை எல்லாம் சும்மாவிடக்கூடாது.
போலீஸில் புகார் அளித்தும் இதுவரை பயில்வான் ரங்கநாதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படியே விட்டு விட்டால், அவரும் தான் செய்வது எல்லாம் சரி என்பது போலவே அடுத்தடுத்த பெண்களையும் நடிகைகளையும் டேமேஜ் செய்வார்.
போலீஸ் அதிகாரிகள் விரைவாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.