Siragadikka Aasai: நள்ளிரவில் விஜயாவிடம் மாட்டிக்கொண்ட ரோகினி! தங்கையால் மகிழ்ச்சியில் மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னை பரீட்சை எழுத வைத்த முத்துவின் காலில் விழுந்து சத்யா மன்னிப்பு கேட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ரோகினி தனது தவறை மறைப்பதற்கு மீனா மற்றும் முத்துவிற்கு கெடுதல் செய்து வருகின்றார். வீட்டில் மீனாவை விஜயா கொடுமை செய்து வருகின்றார்.
முத்துவின் மொபைல் போனை எடுப்பதற்கு பல திட்டங்கள் போட்ட வந்த ரோகினிக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது.
மீனா மகிழ்ச்சியில் காணப்படுகின்றார். கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் சீதாவை பெண் கேட்டுள்ளனர். இதனை மீனாவின் தாய் அவரிடம் கூறியுள்ளார்.
மற்றொரு புறம் விஜயாவிடம் ரோகினி சிக்கிக் கொள்ளும் நிலையில், மீனா எதற்காக சிரித்தார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் தவித்து வருகின்றார்.