சிப்ஸ் வாங்க சென்ற சகோதரன்: திரும்பி வந்து அவதானித்த போது காத்திருந்த பேரதிர்ச்சி
நடைபயிற்சியின் போது தங்கையை விட்டுவிட்டு சிப்ஸ் வாங்க சென்ற அண்ணன் திரும்பி வந்த போது உயிருக்கு போராடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவ மாணவி நேகா அர்சி. இவர் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்துவரும் நிலையில், எப்பொழுதும் அவரது சகோரருடன் நடைபயற்சி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சம்பவத்தன்று நேஹாவும் அவரது சகோதரரும் நடைபயிற்சி மேற்கொள்கையில், லேசான மழைத்தூறல் ஏற்பட்டு, கிளைமேட் நன்றாக இருந்துள்ளது.
இந்நிலையில் தங்கையை நிற்கவைத்துவிட்டு அருகில் உள்ள கடையில் சிப்ஸ் வாங்க சென்றுள்ளார் நேகாவின் சகோதரர்.
அப்போது நேகா செல்பி எடுப்பதற்கு அங்குள்ள பாலம் ஒன்றின் சுவரில் ஏறிய போது, தடுமாறி கீழே விழுந்துள்ளார். நேகா கீழே விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நேகா கீழே விழுவதை அவதானித்த அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேகா உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய வாக்குமூலத்தை வைத்து, இது ஒரு விபத்து என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.