கடகத்தில் செவ்வாய்: செப்டம்பர் 18 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும், தைரியம் மற்றும் ஆற்றலின் அதிபதியாகவும் கருதப்படுகிறார். செவ்வாயின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அந்தவகையில், செவ்வாய் பகவான் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5:03 மணிக்கு கடக ராசிக்குள் நுழைகின்றார். அதன்பின் நவம்பர் 12-ஆம் தேதி வரை கடக ராசியில் நிலைத்திருப்பார்.

செவ்வாயின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களையும், சிலர் எதிர்மறையான பலன்களையும் பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவதால் பெரிதும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும் கிரகமாக கருதப்படுகிறது. அதன் சஞ்சாரத்தால் அவர்களுக்கு பல்வேறு நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்களும் ஏற்படப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை முடிவுக்கு வரும்.
வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், புதிய வேலை வாய்ப்பும் தேடி வரும். நிதி நிலை எதிர்பாராத அளவுக்கு மேம்படும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் இரண்டாம் மற்றும் ஏழாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். தற்போது அவர் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால், வேலை மற்றும் தொழிலில் பெரிய வெற்றியை கிடைக்கும்.
வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதுடன், அதன் மூலம் நிதி நிலையும் மேம்படும்.
வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைத் தரும். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
மேலும், பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. உடல்நலம் சிறப்பாக இருப்பதால் பல்வேறு பணிகளில் தடையின்றி ஈடுபட முடியும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மூன்றாம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். தற்போது அவர் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.ஆறாம் வீட்டில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும் எனக் கருதப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும்.
பணியிடம் முதல் குடும்பம் வரை பல்வேறு விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலையில்லாதவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |