ரத்த சோகையை கட்டுப்படுத்தும் மரவள்ளிகிழங்கு அடை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் Cசத்து செரிந்து காணப்படுகின்றது.இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மேலும் இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது. மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்த உதவும்.
அதிக நார்சத்து இருப்பதால் சமிபாட்டு தொகுதியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் மலசச்க்கலுக்கு சிறந்த தீரி்வாக இருக்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மரவள்ளி கிழங்கில் சற்று வித்தியாசமான முறையில் நாவூரும் சுவையில் எவ்வாறு அடை செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
மரவள்ளிக்கிழங்கு - மீடியம் சைஸ்
வரமிளகாய் - 10
சீரகம் - 1 தே.கரண்டி
பூண்டு - 4-5 பல்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை எடுத்து, நன்றான இரண்டு முறை கழுவிய பின்னர் நீரை ஊற்றி 2 மணிநேரம் வலைரயில் நன்றாக ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து மரவள்ளிக்கிழங்கை எடுத்து, அதன் தோலை சீவிவிட்டு, பின்னர் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
2 மணிநேரங்களின் பின்னர், ஊற வைத்த பருப்பு மற்றும் அரிசியை ஒரு மிக்சர் ஜாரில்சேர்த்து, அத்துடன் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்ததை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியற்றை சேர்த்து, நன்கு கலந்து விட வேண்டும்.
கடைசியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அரைத்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி, அடை போன்று ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த மரவள்ளிக்கிழங்கு அடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |