பல பெண்களுடன் ரகசிய உறவு! அழகான மனைவியை கொன்று விட்டு நாடகம்- விசாரணையில் அம்பலமான தகவல்கள்
தமிழகத்தில் மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டை சேர்ந்தவர் சபரிநாதன்(வயது 30), தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார், இவருக்கும் சேலத்தை சேர்ந்த தரணி தேவி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது, இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மகனுடன் தரணிதேவி அப்பா வீட்டுக்கு சென்று விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாமனார் வீட்டுக்கு சென்ற சபரிநாதன், மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார்.
காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென மர்ம நபர்கள் தாக்கி நகையை கொள்ளையடித்து விட்டதாகவும், இதில் தரணி தேவி படுகாயமடைந்து உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் சபரிநாதன் தான் குற்றவாளி என தெரியவந்தது.
போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், திருமணத்திற்கு முன்பே, எனக்கும், திருமணமான ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது.
இந்த சூழ்நிலையில் தான் எனக்கு திருமணம் நடந்தது, ஒருகட்டத்தில் தரணிதேவிக்கு உண்மைகள் தெரியவர என்னுடன் சண்டையிட்டார்.
கோபித்துக்கொண்டு அவளுடைய அப்பா வீட்டுக்கு சென்றுவிட்டார், என் மனைவியை சமாதானப்படுத்தி தனிக்குடித்தனம் செல்லலாம் என அழைத்து வந்தேன்.
காரில் வரும் போது, அந்த பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா? என கேட்டார், இதில் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றவே அவளை அடித்துக் கொலை செய்தேன்.
நான் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக கடத்தல் நாடகம் ஆடினேன் என தெரிவித்தார்.
இதனையடுத்து சபரிநாதனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.