சரக்கு வாங்கி சூடம் கொளுத்தி குடி மகன் செய்த அலப்பறை! சரக்கே.... சரணம்.... வைரலாகும் காட்சி
மதுரை டாஸ்மாக் கடையில் குடிமகன் ஒருவர் சரக்கு வாங்கிவிட்டு அதை சூடம் கொளுத்தி வணங்கிவிட்டு குடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டன.
கடந்த ஒரு மாதமாக குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் திண்டாடி வந்த நிலையில் இன்று கடை திறந்தவுடனேயே சரக்கை வாங்க ஏராளமான குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் கூடி விட்டனர். பலஇடங்களில் மிகப்பெரிய அளவில் க்யூ நின்றது.
இந்நிலையில் இன்று காலையில் மதுரையில் கடையை திறந்ததும் முதல் ஆளாக சரக்கை வாங்க நின்றவர் சூடன் தட்டுடன் வந்து கடையை திறந்ததும் சூடன் ஏற்றி வைத்துவிட்டு கடைக்கு சென்று சரக்கை வாங்கி அதையும் சூடன் முன்பு வைத்து வழிபட்டு பின்பு குடிக்கிறார்.
#WATCH | A local in Madurai worships bottles of liquor after Tamil Nadu govt permits the reopening of liquor shops in the state pic.twitter.com/sIp9LUR0GM
— ANI (@ANI) June 14, 2021