பயங்கரமாக படமெடுத்து வந்த ராஜ நாகம்: துணையை தேடி வந்ததா? மக்கள் கூறும் உண்மை
மிகப்பெரிய ராஜ நாகத்தை ஒருவர் வெறும் கையால் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிராபியில் மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று பனை தோட்டத்தில் உள்ள கழிவு நீர் சேகரிக்கும் தொட்டிக்குள் மறைந்து இருந்துள்ளது.
இதைப் பார்த்த மக்கள் உடனே பாம்பு பிடிக்கும் தன்னார்வலரான சுதீ நவ்ஹாத் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சுதீ நவ்ஹாத், கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் போராடி பாம்பை பிடித்தார். முதலில் பாம்புக்கு போக்கு காட்டி சாலைக்கு கொண்டு வந்தார்.
பின்னர் அதை பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், இறுதியில் சாதுர்யமாக அப்பாம்பை பிடித்துள்ளார். பிடிப்பட்ட ராஜ நாகத்தினை பாதுகாப்பாக வனப்பகதியில் விடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மற்றொரு நாகப்பாம்பு உள்ளூர் மக்களால் கொல்லப்பட்டதால், பாம்பு தன் துணையை தேடி இங்கு வந்திருக்கலாம் என நினைக்கிறேன்’ என்று உள்ளூர்வாசிகள் கூறி வருகின்றனர்.