வசமாக சிக்கிய பின்னும் இப்படியா? இணையத்தை ஆக்கிரமிக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய பதிவு!
மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ பரிசோதனையின் பின்னரும் எதையும் பொருட்படுத்தாமல் செம கூலாக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவின் இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
தற்போது ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜின் ஆண் குழந்தைக்கு தயாகியுள்ள நிலையில் அவரால், ஏமாற்றப்பட்டு குழந்தைக்கு நியாயம் வேண்டும் என தற்போது வரையில் போராடி வந்தார்.

இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் மாதம்பட்டி ரங்கராஜ் வசமாக சிக்கினார். அதனால் ஜாய் கிரிஸில்டாவின் நீண்ட நாள் போராட்டத்துக்கு விடை கிடைத்துள்ளது.
அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தையை இறுதிவரை பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துவிட்டார் என ஜாய் கிரிஸில்டா தனது பதிவின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இவ்வளவு சர்சைகளும், குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் தன்னை சுற்றி இருந்தலும் எதையும் கண்டுக்கொள்ளாத வகையில்,
ஒவ்வொரு இடமும் உங்களுக்குள் ஏதோவொன்றை விட்டுச் செல்கிறது - ஒரு நிறம், ஒரு நறுமணம், உங்களின் அமைதியான ஒரு வடிவம். அதை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்...என குறிப்பிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |