மனைவியுடன் ஆஜராகிய மாதம்பட்டி ரங்கராஜ்.. இனி தப்பிக்கவே முடியாது- அதிரடி உத்தரவு
மனைவியுடன் இன்று காலை விசாரணைக்கு வந்த மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளீர் ஆணையகம் விடுத்த உத்தரவு இணையவாசிகளிடையே பகீர் கிளப்பியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கைக்கோர்த்து வந்த ரங்கராஜ்
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணைக்கு வரும்படி சம்மன் மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பட்டது.
இது தொடர்பான விசாரணை இன்றைய தினம் நடந்தது, அதற்கு தன்னுடைய முதல் மனைவியின் கையை பிடித்த படி வந்த மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளீர் ஆணையகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, நேருக்கு நேர் இருத்தரப்பினரும் அமர வைத்து சுமாராக 2.5 மணி நேரம் நடந்த விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக குறித்த விசாரணையை எதிர்வரும் 29ஆம் தேதிக்கு மகளீர் ஆணையகம் தள்ளி வைத்துள்ளது.
இதனை அடுத்து, மனைவியுடன் கீழே இறங்கிய ரங்கராஜை மறைத்து ஊடகவியலாளர்கள் இருந்ததால் திணறியடித்துக் கொண்டு காரில் ஏறிச் சென்றுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |