விசாரணைக்கு கைக்கோர்த்து வந்த மாதம் ரங்கராஜ்.. பிரசவத்தை நெருங்கும் ஜாய் கிரிசில்டா- நேரில் சந்திப்பு!
மாதம்பட்டி ரங்கராஜ் அவருடைய முதல் மனைவியின் கையை இருக்கமாக பிடித்துக் கொண்டு ஜாய் கிறிஸில்டாவின் வழக்கு விசாரணைக்கு வந்த காணொளி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கைக்கோர்த்து வந்த ரங்கராஜ்
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணைக்கு வரும்படி சம்மன் மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பட்டது.
இது தொடர்பான விசாரணை நேற்றைய தினம் நடந்துள்ளது. அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய முதல் மனைவியின் கையை இருக்கமாக பிடித்துக் கொண்டு வந்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்கு ஜாய் கிரிசில்டா படியில் கூட ஏற முடியாமல் வரும் காணொளியும் வைரலாகி வருகின்றது.
தவறுகள் அனைத்தும் வெளியில் வந்தும் சரியாக பதில் கொடுக்காத மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வாறு நடந்துக் கொள்வது சர்ச்சையை மேலும் கிளப்பி விட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |