வழக்கை திசைத்திருப்பிய மாதம்பட்டி ரங்கராஜ்.. கண்ணீருடன் பேசிய ஜாய் கிறிஸ்டா
“நிறுவனத்திற்கு அவபெயர் ஏற்படுத்துகிறேன் என மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை திசைத்திருப்பி விட்டார்..” என்று ஜாய் கிறிஸ்டா கண்ணீருடன் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
புகார் கொடுத்த ஜாய் கிறிஸ்டா
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியுடன் விழாவொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கடுப்பான ஜாய் கிரிஸில்டா, “ தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்னுடைய குழந்தைக்கு தந்தை. அவர் எனக்கு சரியானதொரு பதில் கூற வேண்டும். அது வரையில் என்னுடைய போராட்டம் தொடரும்...” என புகார் கொடுத்தாக பகிர்ந்துள்ளார்.
திசைத்திரும்பி வழக்கு
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிறிஸ்டா வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொழுது தன்னை பற்றியும் தன்னுடைய நிறுவனம் பற்றியும் ஜாய் கிறிஸ்டா தவறாக பேசுகிறார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி போடப்பட்டிருக்கும் பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த தீர்ப்பால் மனம் உடைந்து போன ஜாய் கிறிஸ்டா கண்ணீருடன் வெளியில் வந்து, “என்னுடைய குழந்தைக்கு அப்பா வேண்டும் என்பதே என்னுடைய போராட்டம். நான் தவறான பெண் அல்ல. நிறுவனம் பற்றியும் பேசவில்லை. அவருடைய மனைவியையும் குழந்தையையும் நீதிமன்ற வாசலில் நிற்க வைத்து விட்டார். என்னுடைய குழந்தை அங்கீகாரம் கிடைக்கும் வரை போராடுவேன்..” என்றும் கூறினார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் இணையவாசிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |