காலையில் இதையெல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்! மறந்திடாதீங்க
சனிக்கிழமையில் நாம் எதையெல்லாம் காலையில் பார்த்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக சனிக்கிழமை என்றால் அது சனி பகவானின் தினமாக பார்க்கப்படுகின்றது. நம் வாழ்வில் எந்தவொரு கெட்டது நடந்தாலும், அதற்கு சனி பகவான் தான் காரணம் என்று பலரும் பழி போட்டு பேசுவதை நாம் அவதானித்திருப்போம்.
ஆனால் சனிபகவான் தனது பக்தர்களுக்கு வாரி வழங்குவார் என்பது பலரும் அறியாத ஒன்றாக இருக்கின்றது. இங்கு சனிக்கிழமை காலை கீழே கொடுக்கப்பட்ட சிலவற்றை நீங்கள் அவதானித்தால் சனிபகவானின் கருணை உங்கள் மீது இருப்பதுடன் அதிர்ஷ்டமும் வரும் என்று அர்த்தமாம்.
சனிக்கிழமையில் கிடைக்கும் அதிர்ஷ்டம்
சனிக்கிழமை அன்று அதிகாலையில் யாசகம் எடுக்கும் நபர்களை பார்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படுவதுடன், அவர்களுக்கு உதவினால் சனிபகவானின் மகிழ்ச்சியையும் ஆசியையும் வழங்குவாராம்.
அதே போன்று சனீஸ்வரனின் கோவிலுக்கு முன்பு கருப்பு நாய் கண்டால், நல்லது நடக்குமாம். அன்றைய தினம் அந்த கருப்பு நாய்க்கு உணவளிக்க வேண்டுமாம்.
முக்கிய வேலையாக வெளியே செல்லும் கருப்பு மாடு கண்ணில் பட்டால் செல்லும் காரியம் வெற்றியடையுமாம். இதனால் கருப்பு பசுவிற்கு பூஜை போட வேண்டும். வாழ்வில் அனைத்து பிரச்சினையும் தீருமாம்.
துப்புறவு பணியாளர்களை கண்டுவிட்டு துரதிர்ஷ்டம் என்று நீங்கள் மீண்டும் படுக்கைக்கு சென்றுவிடாதீர்கள். ஆம் சனிக்கிழமை இந்த பணியாளர்களைக் கண்டாலும், அவர்கள் தரையை துடிப்பதைக் கண்டாலும் மங்களம் ஏற்படுமாம். இவர்களுக்கு நீங்கள் செய்யும் தானம் செல்வத்தை அதிகரிக்குமாம்.
இது போலவே காலை வேலையில் வீட்டு முற்றத்தில் தாகம் தீர்க்க வந்து தண்ணீர் அருந்தினால் நல்ல சகுணமாக பார்க்கப்படுவதுடன், சனியின் ஆசி முழுமையாக கிடைக்குமாம்.
அதே நேரம் சனிக்கிழமையன்று உங்களுடைய தலையில் காகம் கொத்தினால், நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சனிபகவான் உங்கள் மீது கோபம் கொண்டுள்ளார் என்பதன் அறிகுறிதான் இது.