ஆசியாவின் மிக நீளமான டிரைவ்-இன் முழப்பிலங்காடு கடற்கரை பற்றி தெரியுமா?
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆசியாவின் மிக நீளமான டிரைவ்- இன் (Muzhappilangad) கடற்கரை பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.
தங்க மணல், மென்மையான அலைகள், சாகச விளையாட்டுக்கள் என பார்ப்பதற்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படும் இடம் தான் இந்த கடற்கரை.
கேரளாவின் ஒரே வாகனம் ஓட்டக்கூடிய கடற்கரை இது தான். இதனால் அந்த கடற்கரை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. பாராகிளைடிங், பாராசைலிங், பவர் படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளையும் இங்கு அனுபவிக்கலாம்.
குறைவான அலைகள் இருப்பதால் எப்போதும் பார்ப்பதற்கு பசுமையாக இருக்கும். தர்மடம் தீவுக்கு நடந்து செல்லவும் செய்யலாம்.
இது கடற்கரையின் அழகை அதிகரிக்கும் இடமாக உள்ளது. மயக்கும் மலபார் கடற்கரையின் அழகையும், அரபிக் கடலின் அழகையும் நம்மால் பார்க்க முடியும்.
அந்த வகையில், ஆசியாவின் மிக நீளமான டிரைவ்-இன் முழப்பிலங்காடு கடற்கரை பற்றிய மேலதிக விவரங்களை பதிவில் பார்க்கலாம்.
டிரைவ்-இன் முழப்பிலங்காடு கடற்கரை
ஆசியாவின் மிக நீளமான டிரைவ்-இன் கடற்கரை 4 கிலோமீட்டர் நீளமுள்ளது. மற்ற இடங்கள் போல் அல்லாமல் நாம் நேரடியாக காரில் பயணம் செய்து இயற்கையை பார்க்கலாம். அதே போன்று மோட்டார் சைக்கிள் வைத்திருந்தால் கடற்கரையை அதில் சுற்றிப் பார்க்கலாம்.
வாகனங்களில் பயணம் செய்வது மறக்க முடியாத மகிழ்ச்சியாக இருக்கும். கண்ணூர் மற்றும் தலச்சேரிக்கு இடையே அமைந்துள்ள இந்த இடத்தை இயற்கை அழகு மிகுந்த இடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தலச்சேரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கடற்கரை கேரளாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கடலில் அருகாமையில் உள்ள பெரிய கரும்பாறைகள் கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுத்து நீர் தேங்கி இருப்பது போன்ற ஒரு அழகை கொடுக்கிறது. நீச்சல் செய்ய விரும்புபவர்கள் இங்கு செய்யலாம். இந்த கரும்பாறைகள் புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு புகலிடமாகவும் செயல்படுகிறது.
குளிர்காலங்களில் டெர்ன்கள், கடல் புறாக்கள் மற்றும் மணல் பைப்பர்கள் போன்ற 30க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இங்கு வந்து அமர்ந்திருக்கும். தென்னந்தோப்புகள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக மாறி வருகிறது.
முழப்பிலங்காடு கடற்கரையை பார்ப்பதற்கு வெளி நாடுகளில் இருந்து அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். இந்த பரந்த கடற்கரை அதன் சுவையான மலபார் உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |