இந்த கதையை ஒருமுறை படிங்க... சனி பகவான் உங்க பக்கமே வர மாட்டார்

Sani Peyarchi Hinduism
By Vinoja Apr 16, 2025 06:44 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக சாஸ்திரங்களில் குறிப்பிட்ட பல விடயங்கள் இன்று அறிவியல் துறையையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு வியப்பூட்டுவதாக காணப்படுகின்றது.

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா?

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா?

சாஸ்திரங்களையும் சம்பிரதாய முறைகளை சரிவர பின்பற்றியதால் தான் நமது முன்னோர்கள் நீண்ட ஆயுள் மற்றும் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள்.

இந்த கதையை ஒருமுறை படிங்க... சனி பகவான் உங்க பக்கமே வர மாட்டார் | Listen Nala Damayanti Story Get Rid Of Shani Dosha

அந்த வகையில் இந்த நளன் - தமயந்தி கதையை படிப்பதால் சனி தோஷம் வாழ்க்கை முழுவதும் கிட்டவே நெருங்காது என குறிப்பிடப்படுகின்றது. 

நளன் - தமயந்தி கதை

காட்டிலுள்ள குகை ஒன்றில் ஆகுகன், ஆகுகி என்ற வேடுவ தம்பதியினர் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் அவ்வழியே வந்த துறவி ஒருவரை உபசரித்தனர்.

இந்த கதையை ஒருமுறை படிங்க... சனி பகவான் உங்க பக்கமே வர மாட்டார் | Listen Nala Damayanti Story Get Rid Of Shani Dosha

இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினார்கள்.அந்த சிறிய குகைக்குள் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.

தன் மனைவி ஒரு அந்நிய ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் ஆகுகனுக்கு துளியளவும் இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார்.

அன்றிரவு அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த பின் ஆகுகியும் அதே சமயம் உயிர் துறந்தாள்.

இந்த கதையை ஒருமுறை படிங்க... சனி பகவான் உங்க பக்கமே வர மாட்டார் | Listen Nala Damayanti Story Get Rid Of Shani Dosha

சுயநலமில்லாத இத்தம்பதியினர் தான்  மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். அந்த துறவி மறுபிறவியில் அன்ன பறவையாக பிறந்தார்.

நளன் நிடதநாட்டின் மன்னராக காணப்பட்டான். இவ்வாறு இருக்க ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான்.

நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக நான்  தூது சென்று வருகிறேன்” என அன்னம் சென்றது. 

அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தியும் நளன் மீது காதல் கொண்டாள்.அவளின் சுயம்வரத்திற்கு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது.

இந்த கதையை ஒருமுறை படிங்க... சனி பகவான் உங்க பக்கமே வர மாட்டார் | Listen Nala Damayanti Story Get Rid Of Shani Dosha

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்களும் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். தேவர்கள் எல்லோருமே நளனைப் போல் உருமாறி வந்தனர்.நிஜ நளனும் அந்த சுயம்வரத்தில் பங்கேற்றான்.

புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். இவர்களின் வாழ்கையும் மகிழ்ச்சியாக சென்றது.

தமயந்தியை அடைய முடியாமல் போனதால் தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கட்டளையிட்டார்கள்.

ஆனால் கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரால் நெருங்கவே முடியாது. அவர்களை ஏதும் செய்ய மாட்டார்.

அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.

இப்படியிருக்க ஒரு நாள் பூஜைக்கு தயாரான போது, நளன்  சரியாகக் கால் கழுவ தவறிவிட்டார். “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இந்த கதையை ஒருமுறை படிங்க... சனி பகவான் உங்க பக்கமே வர மாட்டார் | Listen Nala Damayanti Story Get Rid Of Shani Dosha

சனியின் பிடியில் இருந்த நளன், புட்கரன் என்பவனிடம் சூதாட ஆரம்பித்து தனது  பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான்.

காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.

பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள்.

ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்ற பாம்பு கடித்து கருப்பாக மாறினான்.

அந்த பாம்பு  ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி  மன்னன் ரிது பன்னனின் தேரோட்டியாக மாறினான்.

அவன் அங்கிருப்பதை கண்டுப்பிடித்த தமயந்தி, நளனை காண வேண்டும் என்பதற்கான  தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள்.

இந்த கதையை ஒருமுறை படிங்க... சனி பகவான் உங்க பக்கமே வர மாட்டார் | Listen Nala Damayanti Story Get Rid Of Shani Dosha

ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக வந்தான். திருநள்ளாறு தலத்தை அடைந்த பின்னர்  ஏழரைச்சனி நீங்கியது.

தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றுக்கொண்டான்.

அப்போது சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கொடிய துன்பத்துக்கு பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார்.

அப்போது நளன் “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் இனி யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணும் படகூடாது.

என் கதையை படிப்பவர்களை நீங்கள் பிடிக்க கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அதற்கு இணங்கி அருள் புரிந்தார். அதனால் தான் நளன் - தமயந்தி கதையை படிப்பவர்களை சனிதோஷம் நெருங்காது என்பது ஐதீகம்.

இந்த ராசியினரை காதல் செய்வதற்கு முன் இருமுறை யோசிங்க... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரை காதல் செய்வதற்கு முன் இருமுறை யோசிங்க... ஏன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US