கொங்கு நாட்டு பாணியில் செய்யப்படும் வெள்ளை பிரியாணி: ஈஸியா செய்வது எப்படி?
கொங்கு மண்டலம் ஒரு விவசாயப் பகுதி என்பதால், அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். இங்கே அசைவ உணவுகளை மிகவும் சிறப்பாக செய்வார்கள்.
உப்பு காரம் புளி என எந்த சுவையில் அதிகமாவோ குறைவாகவோ இல்லாமல் பக்காவாக காரசார உணவுகளாக கொங்கு நாட்டு உணவுகள் காணப்படுகின்றன. அந்த வகையில் நாம் எல்லோருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும்.
இந்த பிரியாணியை வீட்டில் நாம் காரசாரமாக செய்து சாப்பிடுவதற்கு கொங்கு நாட்டு ரெசிபியை செய்து பார்க்கலாம். எனவே இந்த பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக வெள்ளை பிரியாணி கொங்கு நாட்டு செய்முறையை கற்றுக்கொள்ளுவோம்.
தேவையான பொருட்கள்
- மசாலா விழுது அரைக்க
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு - 12 பற்கள்
- இஞ்சி - 1 துண்டு
- நறுக்கியது பச்சை மிளகாய் - 4
- சோம்பு - 1 தேக்கரண்டி
- ஏலக்காய் - 3
- பட்டை - 2 துண்டு
- கிராம்பு - 4
- உப்பு - 1 தேக்கரண்டி
- தண்ணீர் தயிர் - 2 மேசைக்கரண்டி
- பிரியாணி செய்ய சீரகசம்பா அரிசி - 1/2 கிலோ
- மட்டன் - 1 கிலோ
- நெய் - 2 மேசைக்கரண்டி
- நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- பிரியாணி இலை - 2
- பட்டை - 1 துண்டு
- அன்னாசிப்பூ ஏலக்காய் - 3
- கல்பாசி - 3 துண்டு
- மராத்தி மொக்கு - 2
- ஜாவித்ரி கிராம்பு - 5
- வெங்காயம் - 1 நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2 கீறியது
- புதினா - 1/2 கட்டு
- கொத்தமல்லி - 1/2 கட்டு
- தண்ணீர் - 3 கப் (250 மி.லி கப்)
- எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
செய்முறை

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள்
முதலில் சீரகசம்பா அரிசியை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் மசாலா விழுது அரைக்க மிக்ஸியில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, உப்பு, மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து இவற்றை மை போல அரைத்து எடுக்கவும்.
இதன் பின்னர் மட்டனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து தயிர் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும் . பின்னர் குக்கரில் நெய், நல்லெண்ணெய், பிரியாணி இலை, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கல்பாசி, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கிராம்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
அடுத்ததாக வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு ஊறவைத்த மட்டனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இதன் பின்னர் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு குக்கரை மூடி மிதமான தீயில் 6 விசில் வரும் வரை வேகவிடவும். அடுத்து குக்கரை திறந்து ஊறவைத்த சீரகசம்பா அரிசியை சேர்த்து கலந்து விட்டு இறுதியாக எலுமிச்சைபழச்சாறை சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.
பின்னர் ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் ஏதாவது பாரம் மேல் வைத்து தம் போட்டு வைக்கவும். அவ்வளவு தான் இப்போது சுவையான கொங்குநாடு வெள்ளை பிரியாணி தயார்.

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |