Kitchen Vaastu Tips: இந்த பொருட்களை தலைகீழாக வைத்தால் அவ்ளோதான்!
சமையலறையில் எந்தெந்த பொருட்களை தலைகீழாக வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆரோக்கியம் தரும் சமையலறை
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு கட்டுபவர்கள் சமையலறையை அதிகமாக வாஸ்து பார்த்து கட்டுகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் சமையலறையை அமைத்தால், நேர்மறையான ஆற்றலைப் பெறலாம்.
வாஸ்துவின் அடிப்படையில், வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான சக்தி உண்டு. இதில் ஒன்று தான் சமையலறை ஆகும்.
அன்னபூரணி தேவி மற்றும் மகாலட்சுமி வாசஸ்தலமாகவும் சமையலறை கருதப்படுகி்னறது. அந்த வகையில் நாம் கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறித்து தெரிந்து கொள்வோம்.
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இடமாக சமையலறை இருக்கும் நிலையில், பெரும்பாலான பெண்கள் அதிகமான நேரத்தை இங்கு தான் கழிக்கின்றனர்.
சமையலறையில் வாஸ்துபடி பொருட்களை அடுக்கி வைத்தால் வீட்டில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் உச்சத்தை தொடுமாம்.
சமையலறையின் வாஸ்து
வாஸ்து சாஸ்திரபடி சமையலறை என்பது அக்னி மூலதளம் என்று அழைக்கப்படுகின்றது. சமையலறையில் உள்ள தூய்மை, பாத்திரம் அடுக்கும் முறை இவற்றிற்கு வாஸ்து விதிகள் உள்ளது.
அடுப்பு, பாத்திரங்கள் மற்றும் மிக்சி கிரைண்டர் போன்ற இயந்திரங்கள் ஆகியவற்றை சரியான இடத்தில் வைக்கும் போது சமையல் அறை அழகாக இருப்பதுடன், நாம் அங்கு செல்லும் போது நம்பிக்கையும், சந்தோஷம் கிடைப்பதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமையலறை வடமேற்கில் வைப்பதை தவிர்த்து, கிழக்கு அல்லது தெற்கு இருக்க வேண்டும். சமையலறையில் குப்பையை கிழக்கு பக்கம் வைக்கக்கூடாது, இது மகாலட்சுமியின் நுழைவில் தடையாக அமையுமாம்.
பழைய மற்றும் உடைந்த பாத்திரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இரவு நேரத்தில் பாத்திரத்தினை கழுவாமல் வைக்கக்கூடாது. இது மகாலட்சுமியின் கோபப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
அமைதி மற்றும் நலனுக்காக சமையலறையில் எப்போதும் ஒழுங்கு மற்றும் தூய்மை நிலவ வேண்டும்.
தலைகீழாக வைக்கக்கூடாத பாத்திரங்கள்
சமையலறையில் பாத்திரங்களை அடுக்கி வைப்பதில் கூட வாஸ்து பார்க்கப்படுகின்றது. பாத்திரங்களை கழுவிய பின்பு அதனை தலைகீழாக வைத்து உலர்த்துவது நம் அனைவரின் வழக்கமாகும்.
ஆனால் வாஸ்து நம்பிக்கைகள் படி, தவா, தோசைக்கல் மற்றும் எண்ணெய் சட்டிகள் போன்ற பாத்திரங்களை தலைகீழாக வைக்க கூடாது. இவற்றினை தலைகீழாக வைப்பதால் எதிர்மறையான சக்திகள் சமையலறையில் பரவி, இதன் தாக்கம் நேரடியாக குடும்பத்தில் நலனையும், பண வரவையும் பாதிக்குமாம்.
எவ்வாறு வைக்கலாம்?
சமைத்து முடித்ததும், தவா, தோசைக்கல்லை நன்றாக கழுவி செங்குத்தாக வைக்க வேண்டும். தலைகீழாக வைப்பதை தவிர்த்து, பக்கவாட்டாக வைக்கலாம்.
இவ்வாறு வைக்கும் போது வீட்டில் சந்தோஷம் பல மடங்கு அதிகரிப்பதுடன், பணப்புழக்கமும் அதிகரித்து, வருமானம் பெருகுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW