2025-ல் வெடிக்குமா மூன்றாம் உலக போர்? பாபா வாங்கா கணிப்பால் நிலைகுலையும் உலகம்
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் பாபா வாங்காவின் கணிப்புக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
அவரது கணிப்புகளில் பல உண்மையாகியுள்ளன. இதனால் மக்கள் பாபா வாங்காவின் கணிப்பக்களில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள்.
இதுவரை அவருடைய பல கணிப்புகள் உண்மையாகி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பல்கேரியாவை பிறப்பிடமாக கொண்ட பாபா வங்கா, தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்தார்.
பார்வை இழந்த பின்னரும் எதிர்காலத்தை கச்சிதமாக கணிக்கும் சக்தி இவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்னர் எதிர்காலத்தில் நடக்கப்போகும் அழிவுகள் பற்றி கூறியுள்ளார். கடந்த சில தினங்களாக ஈரான்- இஸ்ரேயல் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இத்துடன் போர் நிறைவு பெறும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாபா வாங்கா கணிப்பில் அடுத்த போர் ஆரம்பமாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சற்று அச்சத்துடன் தான் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் வேறு என்னென்ன அழிவுகள் 2025-ல் நடக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
2025ல் என்ன நடக்கும்?
2025ஆம் ஆண்டில் பாபா வாங்காவின் கணிப்புபடி, உலக அழிவு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. எதிர்வரும் 5079ஆம் ஆண்டில் உலகம் முழுமையாக அழிந்து விடும். பூமியில் பார்ப்பதற்கு கூட மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டில் பெரிய மோதல்கள், சோகமான சம்பவங்கள், போர் சம்பவங்கள் நடைபெறும் என கூறியிருந்தார். இதன்படி, போர் நடந்து பல உயிர்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த நாடுகளில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். பஞ்சம் கூட வரலாம்.
மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல் ஏற்படும் என கூறிய வேளையில், இந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதமும் ஏற்படும்.
2025ஆம் ஆண்டில், மோதல் காரணமாக மக்கள் தொகை கணிசமாகக் குறைந்து 2028-ல் புதிய வளங்களைத் தேடி மனிதர்கள் வீனஸை(Venus)அடைவார்கள்.
அதன் பின்னர் 2033-ல் மிகப்பெரிய பனிக்கட்டிகள் உருகி, கடல் மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பெரிய அலைகள் தரையை நோக்கி வந்து உயிர்சசேதங்களை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளார்.
2130ல் வேற்றுகிரகவாசிகளுடனான மனித தொடர்பு ஏற்பட்டு, 2170ல் பருவநிலை மாற்றம் பூமியில் அழிவை ஏற்படுத்தும். இதனால் பூமி வறட்சியடைந்து மனித வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும்.
3005ஆம் ஆண்டு பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே போர் ஏற்படும். 3797ல் பூமியிலிருந்து உயிர்கள் பிரியும் என்றும், இறுதியாக 5079ல் உலகம் அழிந்து மனித இனமே இருக்காது என்றும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |