ஆசையாக பர்கர் வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! உள்ளே இருந்த மர்ம பொருள்;
பர்கரை வாங்கிய நபருக்கு அதில் நீல நிற கையுறை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் திண்டிவனத்தை சேர்ந்தவர் டேவிட்(29) தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரும், இவரது நண்பரும் புதுவை கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி. ஓட்டலில் பர்கர் வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.

இதையடுத்து, அவர் சாப்பிடுகையில், அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. உடனே அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்த பொழுது அதில் நீல நிற கையுறை இருந்தது தெரியவந்ததுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு வேறு பர்கர் தருவதாக கூறினர்.
அதற்கு மறுப்பு தெரிவித்து டேவிட் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு வீடியோ எடுத்து புகாரையும் அனுப்பி உள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பாகவும் ஆகியுள்ளது.