துளியும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி பாண்டியன் செய்த அலப்பறை- அக்காவும் துணையா?
“ எங்க வீட்டுக்கு வந்து பாத்தீங்களா? ” என பயில்வான் வாயை கீர்த்தி பாண்டியன் அடைத்துள்ளார்.
சினிமா பயணம்
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் சினிமாவிற்குள் “தும்பா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம் என பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் “ கண்ணகி ” திரைப்படம் நாளைய தினம் திரைக்கு வரவிருக்கின்றது.
இப்படத்தில் அம்மு அபிராமி, ஷாலின் சோயா, வித்யா பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கீர்த்தி பாண்டியன் - பயில்வான்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் துளியும் மேக்கப் இல்லாமல் அலப்பறை செய்த காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், அவருடைய சகோதரியான ரம்யா பாண்டியனும் இருக்கிறார். இருவரும் துளியளவும் மேக்கப் போடவில்லை. இருந்தும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.
காணொளியை பார்த்த ரசிகர்கள், “ மேக்கப் போடாமல் இவ்வளவு அழகா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |