படத்திற்காக இப்படியா? நடிகை கயாடு லோஹர் செய்த செயல்... இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி!
சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர் படத்திற்காக செய்த தியாக செயல் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
கயாடு லோஹர்
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடுலோஹர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து, வேற்று மொழி படங்களில் நடித்து வந்த இவர்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் பல்லவி என்ற கதாப்பாத்தில் நடித்து தழிழ் சினிமாவில் கால்பதித்தார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘டிராகன்’.
ஏ.ஜி.எஸ். தயாரித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சற்று கிளாமர் ஆன ரோல் என்றாலும் அதில் நடித்து இளசுகளை கவர்ந்துவிட்டார் அவர். தற்போது சென்சேஷன் நடிகையாக மாறி இருக்கும் அவர் தற்போது அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமன்றி சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியும் இவர் தான். சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்தது. கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக கயாடு மாறியுள்ளார்.
இந்நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்திற்காக அவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் மண்ணும், ரத்தமும் கலந்த மேக்கப் எல்லாம் போட்டு அவர் படப்பிடிப்புக்கு தயாராகும் காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |