தொப்பை முதல் மலச்சிக்கல் வரை மருந்தாகும் கடுக்காய் - நன்மைகள் பற்றி தெரியுமா?
ஆயிரக்கணகணக்கான நன்மைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் கடுக்காய் பற்றி பதிவில் பார்க்கலாம்.

கடுக்காய்
கடுக்காயை மலச்சிக்கல் தீர இரவு நேரங்கள் மக்கள் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள்.
இதற்கு காரணம் மாலையில் கடுக்காய் சாப்பிடுவது நிறைய பலன்களைத் தரும் என்று முன்னோர்கள் கூறி உள்ளனர்.
அதேபோல காலை வெறும் வயிற்றில் கடுக்காயை எடுத்துக் கொண்டாலும் நிறைய ஆரோக்கிய நன்மைகளையும் தரும்.
தற்போது இருக்கும் மக்கள் தங்கள் உணவு விடயத்தில் மிகவும் அலட்சியதனமாக நடந்துகொள்கின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்கவும் தவிர்க்கவும் ஆயுர்வேதத்தில் நிறைய தீர்வுகள் இருக்கின்றன.
அவற்றில் மிக முக்கிய விடயங்களில் ஒன்றாக இருப்பது தான் கடுக்காய். கடுக்காயை எப்படி எடுத்துக் கொள்ளலாம். அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி ஆராயலாம்.

கடுக்காயின் வகைகள்
கடுக்காயில் பல வகை உண்டு. அதில் பிஞ்சுக்கடுக்காய் என்று ஒன்று உள்ளது.
இது மலத்தை இளக்க செய்து மலச்சிக்கலைடி போககும். மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை அழகாக மாற்றும்.
இன்னுமொன்று செங்கடுக்காய் இது காசநோய்க்கு மருந்தாக உட்கொள்ளப்படுகின்றது.
இதில் வரிக்கடுக்காய் என்பது ஆண்களுககு விந்தணுக்களை அதிகரிக்க செய்யும்.

வெறும் வயிற்றில் கடுக்காய்
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையை குறைப்பதற்கு காலையில் வெறும் வயிற்றில் கடுக்காயை சாப்பிடலாம். இது பசியை கட்டுப்படுத்தி அதிகமாக நாம் சாப்பிடுவதை தடுக்கும்.
இதற்கு ஒரு கிளாஸ் எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து குடிக்கலாம்.
வெறும் வயிற்றுடன் இருக்கும் போது கடுக்காயை சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டும் எம்சைம்களை உற்பத்தி செய்து ஜிரணத்தை சீராக்கும். கடுக்காயில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் உடல் கழிவுகளை வெளியேற்றும் பண்புகளும் அதிகமாக இருக்கின்றன.
இதற்கு இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர கல்லீரல் சுத்தமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடுக்காயை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும்.
இதன் மூலம் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டி வைரல் பண்பு ஆகிய மூன்று நன்மைகளையும் கடுக்காய் தரும். தொடர்ந்து கடுக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நேயெதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.
கடுக்காயில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக உள்ளது. இது உடலில் ஏற்படும் மூட்டு வலியை தீர்க்க உதவும். இதை காலை வெறும் வயற்றில் எடுத்தக்கொள்வது மிகவும் நன்மை தரும்.

அதிக பலன் கிடைக்க கடுக்காய் எப்படி சாப்பிட வேண்டும்?
கடுக்காயை நாம் பல்வேறு விதத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
கடக்காயை சிறுது தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை மறுநாள் காலையில் குடிக்கலாம்.
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியைக் கலந்து குடிக்கலாம்.
கடுக்காய் பொடி - கடுக்காயை வாங்கி, அதை உடைத்து கடினமான தோல் பகுதியை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். தோல் பகுதி மட்டுமே உணவாகவோ, மருந்தாகவோ எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பகுதி.
உள்ளே இருக்கும் கடுக்காய் கொட்டை விஷத்தன்மை உடையது என்பதால், எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
பிரித்தெடுத்த கடுக்காய் தோடு பகுதியை சிறு துண்டுகளாக்கி, மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால், பழுப்பும் மஞ்சளுமான கடுக்காய் பவுடர் கிடைக்கும்.

கடுக்காய் கல்பம் என்றால் என்ன?
பாலில் கடுக்காயை போட்டு காய்ச்சி அடுப்பில் இருந்து இறக்கி பால் சூடு குறைந்ததும் கடக்காயை வேறாக்கி உடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும். சுமார் மூன்று நாட்கள் உலர வைக்க வேண்டும்.
பின்னர் இதை அப்படியே எடுத்து கண்ணாடி போத்தலில் போட்டு உடத்து வைக்கவும்.
கடுக்காயின் விதை நச்சுத்தன்மையாக இருந்தாலும் அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும்.
இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம்.

கடுக்காய் தீமைகள்
கடுக்காய் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டது என்றாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டாலோ அல்லது தவறான முறையில் பயன்படுத்தினாலோ பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
இது வயிற்றுப்போக்கு, குடல் வறட்சி, அதிக உடல் வறட்சி மற்றும் கர்பிணிகளுக்கு தேவையற்ற அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடும். கொட்டையை நீக்கிப் பயன்படுத்தாவிட்டால் நஞ்சாகலாம்.
கடுக்காய் சிலருக்கு வயிற்றுப்போக்கு, நீரிழப்பு, காய்ச்சல், ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மருத்துவரின் அறிவுரையோடு சாப்பிட வேண்டும்.

கடக்காய் இரத்த சர்க்கரையை குறைக்கும் என்பதால், ஏற்கனவே சக்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரை கேட்டுக் ஆலோசித்து கடுக்காய் எடுத்துக்கொள்வது நல்லது.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கடுக்காய் சாப்பிடும்போது அவர்களுக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் குமட்டல், நீரிழப்பு மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடலில் அரிப்பு, தோல் வறட்சி மற்றும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் கடுக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்களுக்கான தகவல்களை வழங்க மட்டுமே, இதை பின்பற்றும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும், சுயமாக எடுத்துக்கொள்வது பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)