கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம் இதுவா? உண்மையை உடைத்த பிள்ளைகள்
சமீபத்தில், 85 வயதான தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் இருந்து கிழே குதித்து உயிரிழந்தார்.

கே.ராஜன்
தென்னிந்திய தயாரிப்பாளர்களுள் மிகவும் பிரபலமானவராகவும், ஹிட் படங்களை தயாரிப்பவராகவும் இருந்தவர் கே.ராஜன். இவர் அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து சமீபத்தில் அவருடைய பிள்ளைகள் அவரைப்பற்றி பேசியிருக்குக்கிறார்கள்.

பிள்ளைகள் சந்திப்பு
இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது இல்லம் அமைந்துள்ள தண்டையார்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வந்தடைந்தது.
அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக தற்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கே.ராஜனின் பிள்ளைகள் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.
அவர்கள் பத்திரிக்கையாளரிடம் பேசியது "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க, விநியோகஸ்தர் சங்க தலைவர், நடிகர் கே. ராஜன் அவர்களுடைய பையன் பேசுறேன். என் பேர் சுரேஷ் ராஜன்.

அப்பா போனது சினிமா தொழிலுக்கே லாஸ். இவ்வளவு பெரிய மகா ஜாம்பவானை இழந்தது சினிமா திரையுலகம். அவரை மாதிரி யாரும் வர மாட்டாங்க.
அப்பா சினிமால ஜெயிக்கணும்னு வந்தாரு. பெரிய லெவல்ல ஜெயிச்சாரு.
விநியோகஸ்தர் சங்கத்துல இப்ப தலைவரா இருக்குறாரு. அவரைப் பத்தி தப்பு தப்பா ஏதோ போட்டாங்க கையெடுத்துக் கும்பிடுறேன், அவர் யாருகிட்டயும் அவர் பணம் வாங்கல, கடன் வாங்கல.
தயவுசெஞ்சு இதப் புரிஞ்சுக்கோங்க, தப்பா போடாதீங்க. அவர் பணம்தான் 20 கோடி ரூபாய்க்கு தயாரிப்பாளர்கள் கிட்ட இருக்குது. அதற்குண்டான எவிடென்ஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு.

அதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், இப்போதைய தலைவர் திரு. தமிழ்க்குமரன் அவர்கள்கிட்ட கொடுத்திருக்கோம். ஏற்கனவே அப்பாவும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க.
விநியோகஸ்தர் சங்கத்திலேயும் கம்ப்ளைன்ட் இருக்கு, இதுலயும் இருக்கு யார் யார் கொடுக்க வேண்டியதுன்னு. அதனுடைய நடவடிக்கை எடுப்போம்.
அப்பா கடன் 10 காசு கூட யாருகிட்டயும் வாங்கல. அவர் பணம்தான் 20 கோடி கிட்டத்தட்ட மத்தவங்ககிட்ட இருக்கு. அதுல மனஉளைச்சல் ஆயிதான்.
யாருமே 10 காசு கூட கொடுக்கல, போனும் எடுக்கல பண்ணா. இவ்வளவு பெரிய ஜாம்பவான் அவரு, அவர் போன் பண்ணி யாருமே எடுக்கல.

எடுக்காததுனால மனஉளைச்சலிலேயே ஒரு ரெண்டு வருஷமா இருந்தாரு. ரெண்டு வருஷமா அது அப்படியே இருந்து மூணு தடவை அட்டாக் வந்துருக்கு.
இப்போ, 4 நாளைக்கு முன்னாடிதான் அப்போலோ ஹாஸ்பிட்டல்ல பேஸ்மேக்கர் (Pacemaker) வச்சு நாங்க வந்தோம். வந்து, நல்லா இருந்தாரு ரெண்டு நாள்.
திடீர்னு இந்த மனஉளைச்சல். திருப்பியும் போன் பண்ண ஆரம்பிச்சாரு, யாருமே எடுக்கலன்னு சொன்னவுடனே மனஉளைச்சல்ல இந்த மாதிரி அப்பா பண்ணிட்டாரு” என்று பேசி உள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |