குருவின் ராசி மாற்றம்! குபேர அருளால் கோடிகளில் புரளும் 4 ராசிகள்
ஜோதிடத்தின்படி, தேவகுரு வியாழன் 2022 ஏப்ரல் 13 அன்று தனது சொந்த ராசியான மீனத்தில் பிரவேசித்துள்ளார். 22 ஏப்ரல் 2023 வரை அவர் இங்கு இருப்பார்.
குருவின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அளிக்கவுள்ளது. இந்தக் காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்குப் பணவரவு கிட்டும். வியாழன் கிரகம் தனது ராசியை மாற்ற ஒரு வருடம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவாற்றல், குழந்தைகள், திருமண வாழ்க்கை, தொழில் போன்றவற்றின் காரணியாக வியாழன் கிரகம் கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் வியாழன் வலுப்பெற்ற நிலையில் இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்து இன்பங்களையும் பெறுவார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.
தேவகுரு வியாழன் தனது சொந்த ராசியான மீன ராசியில் நுழைந்துள்ளதால் இந்த 4 ராசிக்காரர்கள் பம்பர் பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த 4 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
இந்த ஒரு வருடம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களது பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும், கௌரவம் அதிகரிக்கும்.
இந்த நேரத்தில் சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். அதே நேரத்தில், சொத்து அல்லது நிலம் போன்றவற்றால் லாபம் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் அனுகூலமான பல நன்மைகளை அள்ளித் தரும். ஆன்மீக பணிகளில் ஈடுபவடுவீர்கள்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி பொருளாதார ரீதியாக நல்ல வகையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் பண ஆதாயத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
சொத்து வாங்கவும் செல்வம் பெருகவும் தற்போது யோகம் உள்ளது. எனினும், இந்த ராசிக்காரர்கள் லாட்டரி, பந்தயம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பல நன்ன பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் பணம் மற்றும் குடும்ப சொத்து ஆதாயங்கள் கிடைக்கலாம். இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
குரு உங்கள் பக்கம் இருப்பது அனைத்து வேலைகளிலும் வெற்றியைத் தரும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். குருவின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது நேரம் சாதகமாக உள்ளது. ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள்.