குழந்தை சாபம் சும்மா விடாது.. நீயெல்லாம் மனுஷனா? கொந்தளிக்கும் ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிஸில்டாவிற்கும் அவருக்கு பிறந்திருக்கும் குழந்தைக்கும் எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கைக்கு, பதில் கொடுக்கும் வகையில் ஆதங்கத்தில் ஜாய் கத்தி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குழந்தை சாபம் சும்மா விடாது!
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணை முதல் மனைவியுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்கு வந்திருந்தார்.
அப்போது இருதரப்பு விசாரணை நடைபெற்றது என்பதால் நிறைமாதக்கர்ப்பிணியான ஜாய் கிரிசில்டாவும் வருகை தந்திருந்தனர். இது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகிய சமயத்தில் ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண்குழந்தை பிறந்து விட்டது என புகைப்படம் பகிர்ந்துள்ளார்.
அதன் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் அவ்வாறு எந்த ஒப்புதலையும் தான் கொடுக்கவில்லை. DNA பரிசோதனைக்கு கூட தயாராக இருக்கிறேன்...” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ஜாய் கிரிசில்டா, “ என்னுடைய குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது, என்னை கொச்சிப்படுத்தினார் அதையும் பொறுத்துக் கொண்டேன். என்னுடைய குழந்தையை கொச்சிப்படுத்துறீயா? நான் உங்களை மிரட்டி என்னுடன் வாழ வைக்கல, மிரட்டியதால் என்னுடன் வாழல, காசுக்காக தான் இவற்றை செய்தேன் என அவரும் கூறுவது சரியில்லை.
நாலு சுவருக்குள் நடந்த விஷயத்தை யாரும் மறைக்க முடியாது. என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவற்றை தான் மீடியாவுக்கு கொடுப்பேன்...” என கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |