அம்மாவை அடிச்சாங்க.. ஜாய் கிறிஸ்டா மகன் பகிர்ந்த தகவல்- கதறியழுத மாமியார்
“நான் உறங்கிய பின்னர் என்னுடைய அம்மாவை அடித்தார்..” என ஜாய் கிறிஸ்டா மகன் பகிர்ந்த தகவலை அவருடைய தாயார் கதறியழுதப்படி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
புகார் கொடுத்த ஜாய் கிறிஸ்டா
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியுடன் விழாவொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கடுப்பான ஜாய் கிரிஸில்டா, “ தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்னுடைய குழந்தைக்கு தந்தை. அவர் எனக்கு சரியானதொரு பதில் கூற வேண்டும். அது வரையில் என்னுடைய போராட்டம் தொடரும்...” என புகார் கொடுத்தாக பகிர்ந்துள்ளார்.
மகன் பகிர்ந்த தகவல்
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிய உறுதிப்படுத்தும் வகையில் ஜாய் கிறிஸ்டா அம்மா பகிர்ந்த தகவல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, “ரங்கராஜ் என்னுடைய மகளை அடித்து அவளுக்கு காது கேட்காது. இதனை என்னுடைய மகள் கூறவில்லை, என்னுடைய பேரன் இருக்கும் பொழுது அடித்ததை பார்த்து விட்டு என்னிடம் கூறினார். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நான் தான் ஜாய்யை வெளியில் கூற வேண்டும் என்று கூறினேன். இனியும் ஒரு ரங்கராஜ் இப்படி வரக் கூடாது. என்னுடைய பெண்ணை தரம்குறைவாகக் கூட பேசியிருக்கிறார். அவருடைய நண்பரின் ஆலோசனைப்படி தான் ரங்கராஜ் நடந்துக் கொள்வார்...” என பேசியிருக்கிறார்.
இந்த காணொளியை பார்த்த பலரும், மாதம்பட்டியின் தவறை சுட்டிக்காட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |