அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை : ஜாய் கிறிஸில்டாவின் கண்ணீர் மல்க வைக்கும் பதிவு
ஜாய் கிறிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தையிள் பாதத்தை கையில் ஏந்தியவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, வழக்கு தொடுத்த அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை ராகா ரங்கராஜ்.... என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் பலரையும் நெகிழச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.

மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில், ஜாய் கிரிசில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடனான உறவை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்காததன் காரணமாக ஜாய்க்கு ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

கடந்த ஆக்டோபர் 15 விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என ரங்கராஜிக்கு மகளீர் ஆணையம் சம்மன் வழங்கியிருந்த நிலையில் ரங்கராஜ் முதல் மனைவியுடன் ஆஜராகியிருந்தார். அதனையடுத்து ஜாய் குழந்தையை பிரசவித்த செய்திகள் இணையத்தில் வைரலானது.

மாதம்பட்டி ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டாதகவும் சில செய்தி தளங்களில் செய்திகள் வெளியாகியது. அதனை தொடர்ந்த அதற்கு மறுப்பு தெரிவித்து மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

குழந்தை பிரசவித்த மறுநாளில் இருந்தே ஓய்வின்றி குழந்தைக்காக நியாயம் கேட்டு போராடி வரும் ஜாய் தற்போது குழந்தையின் பாதத்தை கையில் ஏந்தியவாறு வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |