12.5 கோடி இழப்பு: அவதூறு கருத்துகள் தெரிவிக்க தடை! ஜாய் கிரிசில்டாவின் உருக்கமான பதிவு
சட்டம், ஊடகம் என அனைத்து வகையிலும் தனது பிறவா குழந்தைக்காக நியாயம் கேட்டு, போராடிவரும் ஜாய் கிரிசில்டா தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில், வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் சர்ச்சை
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு அவபெயர் ஏற்படுத்துவதாகவும் அதனால் தனது நிறுவனத்துக்கு 15 நாட்களில் 12.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இரண்டாம் மனைவி மீது மாதப்பட்டி ரங்கராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து கண்ணீருடன் ஊடகங்களிடம் பகிர்ந்துக்கொண்ட ஜாய், பணம் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது இப்போது வரையில் என் வயிற்றில் வளரும் அவரின் குழந்தைக்கு எந்த பதிலும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கர்ப்பத்தை காட்டும் புகைப்படத்துடன், மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜை டேக் செய்து தற்போது ஜாய் கிரிசில்டா வெளியட்டுள்ள பதிவு இணையத்தில் தீயாய் பரவிவருகின்றது.
