கண்டுக்கொள்ளாத கணவன்: கவலையின் உச்சத்தில் ஜாய் கிரிஸில்டா... வைரலாகும் புதிய பதிவு!
ஒவ்வொரு முறையும் மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர் குழந்தையின் தந்தை எப்போது வருவார் என கேட்கும் போது அழுகையுடன் சேர்த்து வார்தைகளையும் விழுங்கிவிடுகிறேன்.
இந்த வலி சாதாரணமானது அல்ல.. கர்மா நிச்சயம் பதில் சொல்லும் என குறிப்பிட்டு ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு அவபெயர் ஏற்படுத்துவதாகவும் அதனால் தனது நிறுவனத்துக்கு 15 நாட்களில் 12.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இரண்டாம் மனைவி மீது மாதப்பட்டி ரங்கராஜ் வழக்குப்பதிவு செய்திருந்தார்.
தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடனான உறவை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்கவில்லை என்பதால், ஜாய் கிரிஸில்டாவுக்கு இது குறித்து கருத்து தெரிவிக்க தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடிவரும் ஜாய் கிரிஸில்டா தனது நிலைமை குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. நெட்டிசன்கள் பலரும் ஜாய்க்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
