Viral video: முசோரி அருவியில் திடீரென புகுந்த பாம்பு- தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்
முசோரி அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருக்கும் பொழுது திடீரென ராஜ நாகம் செய்த வேலை பார்ப்பவர்களை பிதியடைய செய்துள்ளது.
தலைத்தெறிக்க ஓட விட்ட பாம்பு
பாம்புகள் மிகவும் விஷமுள்ள ஒரு ஊர்வனவாகும். இவைகள் காட்டுப்பகுதியில் வாழும்.
ஆனால் தற்போது காடுகள் அதிகமாக அழிக்கப்படுவதால் மனிதர்கள் வாழும் இருப்பிடங்களுக்கு வருகிறது. இதனால் மக்கள் தினமும் இது பற்றிய அச்சத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதுவும் காடு பக்கமாக உள்ள வீடுகளில் வாரத்திற்கு ஒரு நாளாவது பாம்புகளை காணலாம்.
அந்த வகையில், கருப்பு நிற ராஜநாகமொன்று மக்கள் குளிக்கும் முசோரி அருவியில் விழுந்துள்ளது. அது தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்குமிங்குமாக ஓடுகிறது.
பாம்பை குளத்துக்குள் கண்ட மக்கள் தலைத்தெறிக்க சிதறி ஓடுகிறார்கள். பாம்பு தண்ணீர் இருந்து மேலே ஏறியதும், மக்கள் மீண்டும் குளத்தில் குளிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த காட்சியை பார்க்கும் போதே திக்திக் என இருக்கிறது.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் குளத்தில் குளிப்பது குறித்து அச்சம் கொள்ளும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |