விவேக்கை விட கொடுமையாக இறந்த பிரபல நடிகர்: திடுக்கிட வைக்கும் உண்மைகள் அம்பலமானது
சினிமா பிரபலங்களைக் குறித்து அவ்வப்போது, பல தகவல்களை வெளியிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த ஜனகராஜ் மற்றும் சுருளி ராஜன் குறித்து பல உண்மைகளைக் கூறியுள்ளார்.
சினிமாவிற்கு வரும் முன்பே வசதியாக சொந்த வீடு, பைக் என்று இருந்தவர் தான் ஜனகராஜ். செந்தில், கவுண்டமணிக்கு சமமாக தனது காமெடியினை மக்களுக்கு கொடுத்து இன்றும் மக்கள் மனதில் கொமடி நாயகனாக வலம் வருகின்றார்.
குறிப்பாக ரஜினி, கமல் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி அசத்தியவர் என்றே கூறலாம். மேலும் இந்த முன்னணி நடிகர்களே தனது படத்திற்கு ஜனகராஜ் நடிக்கனும் என்று அவருக்காக சிபாரிசு செய்யும் அளவிற்கு தனது நடிப்புத்திறமையினை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ஆனால் ரஜினி, கமல் படங்களில் நடிப்பதற்கு முன்பு, ஜனகராஜ் விபத்து ஒன்றில் சிக்கி உயிர் பிழைப்பதற்கே கஷ்டம் என்ற நிலைக்குச் சென்றுள்ளார். அந்த விபத்தில் ஜனகராஜின் கண்களில் ஊனம் ஏற்பட்டதாம்.
இதையே ஒரு ஸ்டைலாக கொண்டு, பின்பு தான் ரஜினி கமல் படங்களில் கொடிகட்டி பறந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல மதுபழக்கத்திற்கு அடிமையான ஜனகராஜ் தனது எதார்த்தமான நடிப்பினை நடிக்கமுடியாமலும், வசனங்களை சரியாக கூறமுடியாமல் போன நிலையில் நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டாராம்.

நடிகர் சுருளிராஜன் குறித்து கூறுகையில், இவரது கொமடிக்காகவே படம் உருவாக்கப்பட்டது என்றும் இவரது தமிழ் உச்சரிப்பினையும், இவரது குரலுமே இவருக்கு மிகப்பெரிய பாசிட்டிவ்வாக அமைந்தது.
அதிலும் கொமடி நடிகர்களில் முகலட்சணம் கொண்டவராகவும், தனது சுருட்டை முடியுமே இவர் புகழ்பெற்று விளங்கியதற்கு காரணமாம்.
நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகராக இருந்து இன்று ஹீரோவாக வலம்வருகிறாரோ, அது போலவே சுருளி ராஜன் துணைநடிகராக வலம்வந்து, பின்பு நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் உயர்ந்தாராம்.
பெண்கள் தொடர்பு அதிகமாக இருந்த இவரது மரணம் விவேக்கின் மரணத்தினை விட மிகவும் கொடுமையாக அமைந்துள்ளது.

ஒரே நேரத்தில் ஏழு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்த சுருளிராஜன், எந்தவொரு படம் என்றாலும் நடிப்பதற்கு சம்மதித்து விடுவாராம். சிறிய படம், பெரிய படம் என்று இல்லாமல் ஒரே நாளில் 3 மணிநேர வீதம் தான் நடிக்கும் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பாராம்.
ஆரம்பத்தில் சிறிதளவே மதுவிற்கு அடிமையான சுருளிராஜன், சோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் மது அருந்தும் பழக்கத்திற்கு வந்துள்ளார். படப்பிடிப்பிற்கு அழைப்பவர்கள் வெளிநாட்டு மதுவினை கொடுத்தே இவரை நடிக்க வைத்தார்களாம்.
அப்பொழுதே அவரது கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். அத்தருணத்தில் நபர் ஒருவர் இளநீரில், ஜின் மதுவினை ஊற்றி குடித்தால், கல்லீரல் அதிகமாக பாதிக்காது, காரத்தன்மை இருக்காது, ஸ்வீட்டாக இருக்கும் என்று கூறியதைக் கேட்டு சுருளிராஜன் மதுவருந்தியதும், சர்க்கரையின் அளவு தாறுமாறாக எகிறிவிட்டதுடன், கல்லீரல் முழுவதுமாக பழுதாகியுள்ளது.
அத்தருணத்தில் முதல்வராக இருந்த எம்ஜிஆர் சுருளிராஜனைக் காப்பாற்றுவதற்கு, விமானத்தின் மூலம் மருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லையாம்.
அவர் இறந்த பின்பும் 12 படங்களில் வரை வெளியான நிலையில், இறக்கும் முன்பு எத்தனை படங்களில் பிஸியாக நடித்திருப்பார் என்பது தற்போது வியக்கவைத்துள்ளது.
தனக்கென தனிமுத்திரை பதித்த நடிகர்களில் சுருளிராஜனும் ஒருவர், தற்போது உயிரோடு இருந்திருந்தால், அவர் இறந்து 10 வருடங்களில் அவரை யாரும் அடித்துக்கொள்ள நடிப்பிற்கு வந்திருக்கமுடியாது என்று கூறினார்.

அதிகமாக வேலை செய்தால் தனது உடல்நிலை ஒத்துழைக்காது என்று தெரிந்த ஜனகராஜ், தற்போது ரெஸ்ட்டில் இருக்கிறார். தனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தாலும், முழுமனதுடன் வேண்டாம் என்று நிறைவுடனே இருக்கின்றார்... தனக்கு பதில் புதிய நடிகர் யாராவது போட்டுக்கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையுடன் தற்போதும் கூறி வருகின்றார்.
ஜனகராஜ் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றாரா? என்பதற்கு மது பழக்கம் அதிகமாக அதிகமாக நபரிடம் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும். யார் பேச்சும் கேட்காமல், கோபத்தில் எறிந்து விழுவார்கள், அதிக சத்தத்தினை வெளிப்படுத்துவது இதெல்லாம் மனநோயின் முதல் கட்டம். ஜனகராஜ் இந்த முதல்கட்டத்திலேயே கவுன்சிலிங் சென்று சரிசெய்துவிட்டார்.
நீண்ட இடைவேளைக்கு பின்பு 96 படத்தில் நடித்தது போன்று, முழுஓய்வு பெற்று அவ்வப்போது படத்தில் நடிப்பதற்கு அவரை எதிர்பார்க்கலாம் என்று உண்மையைக் கூறியுள்ளார்.