நாசா விஞ்ஞானியான ஈழத்தமிழர் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் மக்கள்
நாசா விண்வெளியில் நீண்ட காலம் பணியாற்றிய விஞ்ஞானி வைத்திலிங்கம் துரைசாமி மறைந்துள்ள சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் கடமையாற்றி வந்த இலங்கையின் யாழ்ப்பாணம், குப்பிழான் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி.
இவர், 90 வயதில் நேற்று அமெரிக்காவில் காலமாகியுள்ளார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்த
தமிழ் விஞ்ஞானியான வைத்திலிங்கம் துரைசாமி பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றமையாகும்.
ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது உலகத்தமிழர்களின் பெருமை சேர்த்த இவருக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வந்துள்ளனர்.