மழை நீரை குடிப்பவரா நீங்க? இவ்வளவு ஆபத்துகள் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
பொதுவாகவே மழை காலங்களில்,மழை நீரை சேகரித்து குடிப்பதற்கு பயன்படுத்துதையும் சமையலுக்கு உபயோகிப்பதையும் பெரும்பாலானவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
மழை நீர் தான் உலகிலேயே சுத்தமான தண்ணீர் என்ற கருத்தும் பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

இதில் எந்தளவுக்கு உண்மையிருக்கின்றது? மழை நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா? என்பது போன்ற குழப்பத்துக்கு அறிவியல் ரீதியான தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆய்வு கூறுவது என்ன?
வானத்தில் இருந்து பொழியும் மழை நீரே மிகவும் சுத்தமானது, அதனை முறையாக சேமித்து குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என பெருமளவான மக்கள் நம்புகின்றனர்.

இது குறித்து ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின்படி, மழை நீரில் பிஎஃப்ஏஎஸ் எனப்படும் நச்சு இரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளதால், பூமியின் அனைத்து பகுதிகளிலும் பொழியும் மழை நீரை குடிப்பது பாதுகாப்பானது அல்ல என்று அறியப்பட்டுள்ளது.

மேலும், மழைநீரில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். பல நேரங்களில் மக்கள் மழையில் நனையும்போது நோய்வாய்ப்படுகிறார்கள். மழைநீரில் நுண்ணிய துகள்கள் காணப்படுகின்றன. இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே, மழைநீரை கொதிக்க வைக்காமல் அல்லது சுத்திகரிக்காமல் அப்படியே பயன்படுத்துவது ஆபத்தாகும்.
அதனால் வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை, வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் வயிற்று தொற்றுகளை ஏற்படுத்துவதுடன் தோல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.
இது குறித்து இன்ஸ்டா பிரபலமொருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளியொன்று தற்போது இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |