வீட்டில் செம்பருத்தி செடி பூக்குதே இல்லையா? இந்த ஒரு பொருளை நீரில் கலந்து ஊற்றுங்க
வீட்டில் வளர்க்கும் செம்பருத்தி செடி ஆசைக்கு கூட ஒரு பூக்களும் பூக்காமல் இருந்தால் இந்த பதிவை படித்து பயன்படுத்திய பின்னர் பூக்காமல் இருக்காது.
செம்பருத்தி செடி
பெரும்பாலானோரின் வீட்டில் செம்பருத்தி செடி வைக்கப்பட்டிருக்கும். இதன் பூக்கள் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூவில் இருந்து தற்போது பலரும் டீ செய்து குடிக்கிறார்கள்.
இது தவிர இந்த பூவினை தலைக்கு தேய்க்கும் எண்ணெயிலும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு பல பயன்பாடுகளுக்காக வீட்டில் வளர்க்கப்படும் செம்பருத்தி செடி பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் சிலர் வீட்டில் இருக்கும் செம்பருத்தி செடிகள் பூத்திருப்பது இல்லை. இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணம். இதற்கு தான் தண்ணீரில் ஒரு பொருளை கலந்து தெளிக்கும் போது செம்பருத்தி செடி பூத்து குலுங்கும்.
இந்த தண்ணீர் மூலம் செடிக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் செடி பூக்க தொடங்கும். அந்த வகையில் இதற்கு அதிகமாக தேவைப்படும் சத்து இரும்புச்சத்து தான்.
இதை செடிக்கு கொடுக்க வேண்டும் என்றால் கடைகளில் iron dust என்று கேட்டு வாங்கிகொள்ள வேண்டும். இதை நேரடியாக செடிகளின் மீது உபயோகிக்ககூடாது.
மாறாக 1 லிட்டர் தண்ணீரில் 1-2 கிராம் iron dust-ஐ கலந்து வேர்ப்பகுதியிலும் செடியின் மீதும் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தெளித்து வர ஓரிரு வாரங்களுக்குள் செம்பருத்தி செடியில் அளவுக்கு அதிகமாக பூக்கள் பூப்பதை காணலாம். இந்த எளிமையான முறையை ஒரு இரண்டு மாதம் பின்பற்றினால் பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |