பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி! பறிப்போன கொல்கத்தாவின் ப்ளே ஆஃப்!
ஐபிஎல் தொடரின் இன்றைக்கான போட்டியில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்று லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டிகாக் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியை காட்ட தொடங்கினார்கள்.
இந்த கூட்டணியை பிரிக்க கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் எவ்வளோ முயன்றனர். ஆனால் கடைசி வரை இவர்கள் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை. இறுதி வரை நின்ற இந்த ஜோடி சிக்ஸர், போர் என ரன் மழையை பொழிய 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி, 210 ரன்களை குவித்தது.
டிகாக் 140 ரன்களை அடித்து, சாதனை படைத்தார். கே எல் ராகுல் 68 ரன்களை அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நித்திஷ் ராணா 42 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 50 ரன்களையும் அடித்து வெளியேற, சாம்பில்லிங்ஸ் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு, லக்னோ அணிக்கு பயத்தை காட்டினார்.
இதையடுத்து, பரபரப்பான இறுதிக்கட்டத்தில், ரிங்கு சிங் சிக்ஸர், போர் என ரன்களை அடிக்க கடைசி ஓவருக்கு 21 ரன்களை தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஸ்டாய்னிஸ் ஓவரில் ரிங்கு ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களை பறக்க விட, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதனால், 2 பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது, 5வது பந்தில் ஷாட் அடிக்க ரிங்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். 1 பந்து 3 ரன்களை தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் கடைசி பந்தி க்ளீன் போல்டு ஆக லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
இதன்மூலம், கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் கனவும் பறிப்போனாது. லக்னோ அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.
Aisa josh jisne uda diye hosh! Super proud of our #SuperGiants on this zabardast jeet 🫶🏽👊 #abapnibaarihai💪#AbApniBaariHai💪 #IPL2022 🏆 #bhaukaalmachadenge #LSG #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #lsg2022 pic.twitter.com/hfOfpuxCjZ
— Lucknow Super Giants (@LucknowIPL) May 18, 2022