RCBVSLSG: பரபரப்பான இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டம்.. மழையால் ரத்தானால் ஆர்சிபி வெளியேறிவிடுமா?
ஐபிஎல் இன்றைய எலிமினேட்டரின் இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சரியான பலத்தில் உள்ளதால் எந்த அணி வெற்றி பெறும் என்பதில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஆர்சிபியின் முக்கிய வீரர்கள்
பெங்களூர் அணியை பொறுத்த வரை கேப்டன் டூ பிளசிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.
பந்துவீச்சில், ஹேசில்வுட், ஹசரங்கா, ஷபாஸ் அகமது இவர்களின் மூன்று பேரை நம்பியே அந்த அணி உள்ளது. காயம் காரணமாக ஹர்ஷல் பட்டேல் விலகியுள்ளது பின்னடைவு.
லக்னோ அணியின் முக்கிய வீரர்கள்
லக்னோ அணியை பொறுத்தவரை, டிகாக், கேப்டன் ராகுல், ஹூடா, ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் பக்க பலமாக உள்ளனர்.
பந்துவீச்சை பொறுத்தவரையில், ஆவேஷ் கான், மொசின் கான், ஹேல்டர் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இரு அணிகளை ஒப்பிட்டு பார்த்தால் லக்னோ அணி சற்று பலம் வாய்ந்ததாகதான் உள்ளது.
ஆனால் ஏற்கனவே ஆர்சிபியுடன் ஒரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. இரு அணிகளும், போட்டியில் பல நுணுங்களை நிறைவேற்ற உள்ளது.
ஆர்சிபி அணியை பொறுத்தவரை கே.எல் ராகுலை வீழ்த்தவேண்டும் எனவும், லக்னோ அணியை பொறுத்தவரை டூப்ளசிஸ், விராட் கோலியை வீழ்த்த வேண்டும் என பவுலிங்கில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளனர்.
மேலும், இந்த போட்டி ஒருவேளை மழையால் ரத்தானால், புள்ளி பட்டியலில் முதன்மையாக இருக்கும் காரணத்தினால் லக்னோ வென்றுவிட்டதாக அறிவிக்கப்படும்.