ஐபிஎல் 2022; புதிய இரண்டு அணிகளின் கேப்டன் இவர்கள் தானாம்.. வீரர்களின் முழு லிஸ்ட்;
ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணியின் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு புதிய அணிகள் இணைந்துள்ளதால், இவர்களுக்கு 3 வீரர்களை (2 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர்) மற்ற அணிகள் நீக்கிய வீரர்கள் பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகியோரை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளது.
இதில், ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். மற்ற வீரர்களான ரஷீத் கான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும், சுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோரை தலா 15 கோடிக்கும், இளம் வீரர் சுப்மன் கில்லை 8 கோடிக்கும் அகமதாபாத் அணி வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்றொரு அணியான லக்னோவில், கே எல் ராகுல், ரவி பிஷ்னோய் மற்றும் மார்கஸ் ஸ்ட்டாய்னிஸ் ஆகிய வீரர்களை வாங்கியுள்ளது. லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் செயல்படவுள்ளதையடுத்து, ராகுலை 17 கோடிக்கும், ஸ்டியோனிஸை 9.2 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னோயை 4 கோடி ரூபாய்க்கும், லக்னோ அணி வாங்கியுள்ளது.
மேலும், ஐபிஎல் தொடரின் 10 அணிகளும், வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில், போட்டிக்கு முன்பாக நடைபெறவுள்ள ஏலம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.