இந்திய அணியில் விளையாட ஆபத்தா? விராட் கோலிக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி கொடுத்த அதிர்ச்சி பதில்!
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியை பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சமீப காலமாகவே ரன்களை அடிக்க திணறிவருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அதிலும், ஐபிஎல் போட்டியில் சொதப்பு அவரை பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 236 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
இதில் 3 முறை டக் அவுட்டாகி தனது கிரிக்கெட் வாழ்கையில் மோசமான சீசனை சந்தித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் விராட் கோலி 4 சதம், 973 ரன்கள் என அடித்து சாதனை படைத்த அவரா? இப்படி ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார் என பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
திருமணமாகி 13 ஆண்டுக்கு பின் பிறந்த மகன் - சீரியல் நடிகை நீலிமா வைத்த பெயர் என்ன தெரியுமா?
தடுமாறும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள்
இவர் மட்டுமின்றி தற்போதைய இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் ரன்களை அடிக்க தடுமாறி வருகிறார். இந்திய அணி தற்போதைய பேட்ஸ்மேன்களை கணக்கிடுகையில், ராகுல், தவான், சூர்ய குமார் என இவர்கள் மட்டுமே தற்போதைய பேட்ஸ்மேன்களில் ரன்களை குவிக்கின்றனர்.
மற்றபடி ஐபிஎல் பேட்ஸ்மேன்களை தவிர இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்கள் யாரும் பிரதிபலிக்கவில்லை என்பதே இந்திய அணியில் கவலைக்கிடமான ஒன்று.
இதனிடையில், ஐபிஎல் போட்டியில், டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தற்போது இருந்தே இந்திய அணி தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு தரப்படவுள்ளது. இதேப்போல் புஜாராவுக்கு போடப்பட்ட நிபந்தனையை போன்று விராட் கோலியை உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நான் முதலில் விளையாட இருந்த ஐபிஎல் அணி இதுதான் - மனம் திறந்த விராட் கோலி
விராட் கோலியின் நிலை என்ன?
இந்த நிலையில், இதுகுறித்த பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவிக்கையில், “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து எனக்கு துளிக்கூட கவலையே இல்லை.
விராட் கோலி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர், டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதற்குள்ளாக கோலி தனது பழைய அதிரடிக்கு திரும்புவார் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில், இந்திய அணியின் அனைத்து சீனியர் வீரர்களுக்கும் 3 - 4 வாரங்கள் ஓய்வளிக்கப்படவுள்ளது. அவர்கள் நேரடியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு செல்லவுள்ளனர் என கூறியுள்ளார்.
எது எப்படியோ இனி வரும் போட்டிகளில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி டி20 உலககோப்பையை வாங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.